பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீணுகப் பழிபாவத்தைச் சுமக்கிறது. தெய்வத்துக்கே அடுக்காது என்கிற சமூகப் பிரக்ஞை சமுதாயத்தின் மத்தி யிலேயும் மக்கள் மத்தியிலேயும் அப்பப்ப அபூர்வமாகி விழிப் படைஞ்சுக்கிட்டு வருவது வரவேற்கத்தக்க காரியம்தானுங் களே?' என்று முடித்தான். 'நூத்திலே ஒரு பேச்சு, தம்பி; சத்தியமும் அதுதான்; அதுவே தருமமாகவும் இருக்க வேணும்!” 'அதிலே இன்னெரு சங்கதியும் உண்டுங்க. அதாவது, சமூகத் துரோகிங்களை முகமூடிகளைக் கிழிச்சு முச்சந்தியிலே நிறுத்தி றதிலே சட்டம் இயன்றவரை ஒத்துழைக்கிற மாதிரி, சமுதாயத்தோட நேர்மையான வளர்ச்சியிலே .யும் வாழ்விலேயும் உண்மையான ஆர்வமும் அக்கறையும் கொண்ட சீர் திருத்தவாதிகளும் முழுமூச்சோடே ஒத்து ழைப்புத் தரவேணுமுங்க! அப்பத்தான் சமுதாயத்தோட நல்ல ஆரோக்கியம் பேணிப் பாதுகாக்கப் படவும் முடியு முங்க, அக்கா!' - 'பேஷ், பேஷ்!’ என்று பாராட்டினுள் பார்வதி. இனி கொஞ்ச நாழிகைக்கு அவளுக்கு அடுப்படியும் அடுப்புப் புகையும்தான் சதம். பார்வதி உணர்ச்சி வசப்படலாளுள்; தூயநெஞ்சு துரய்மையான விழிகளை ஊடுருவிப் பாயவே, சுடுநீர் தெறித்தது. தலையை உயர்த்தினள்; நேர்கொண்ட பார்வை யால் தாய் தந்தையரை நோக்கிளுள்: 'உங்க இஷ்டப் பிரகாரமே நடந்துக்கிடுவேன், அம்மா!...நீங்களும் உங்க மகளை நம்பவேணும், அப்பா!' - தன்னுடைய நிதி நிலைமைக்கு ஒரு சமூக அந்தஸ்தை ஏற்படுத்தி சாட்சி, சொன்ன தங்கமான கழுத்துச் சங்கிலியை வருடிய வண்ணம், வண்ணம் மிகுந்த உதடுகளில் முறுவலைச் சிந்திப் பேசிளுள் பார்வதி.

в sg

89