7
யொட்டி, தேசீயப் பத்திரிகைகள் பலவும் வ.உ.சியின் சேவையைப் பாராட்டி எழுதின. ஆனால், சிதம்பர னாரை மறந்த மக்களுக்கு அவருடைய பெயரை நினை வூட்டு மளவுக்குத்தான் சிலை யெடுப்பு விழா பயன் பட்டது. மற்றபடி, அவரது வரலாற்றை அறியச் செய்ய வசதியில்லை. ஏனெனில், அந்நாள் வரை அவ ரது வரலாறு நூல் வடிவில் வெளிவரவில்லை. எனவே, சிதம்பரனாருக்குச் சிலை யெடுத்ததோடு நில்லாமல். அவரது புரட்சி வரலாற்றை புத்தகவடிவில் வெளி யிடுவதையும் எனது கடமையாகக் கொண்டேன் ஆனால், அப்போதைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தூத்துக்குடிப் புரட்சியைப் பற்றிய விவரங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது.
சிதம்பரனார் இயற்றிய 'தனிப்பாடற்றிரட்டு' 'எனது அரசியற் பெருஞ்சொல்" முதலிய நூல்களில் பல சுவை யான குறிப்புகள் கிடைத்தன. மற்றும், சிதம்பரனார் துவக்கிய கப்பல் கம்பெனியின் அமைப்பு, கப்பல்களின் பெயர், அவற்றை வாங்கிய விதம், வெள்ளைக் கம் பெனியுடன் சுதேசிக்கம்பெனியார் நடத்திய போராட் டம்,வ.உ.சி. மீது நடைபெற்ற ராஜநிந்தனை வழக்கு ஆகியவை பற்றிய விவரங்களை 1906 முதல் 1908 வரை வெளிவந்த தினப்பத்திரிகைகளிலிருந்து சேகரித்துக் கொண்டேன். அவையனைத்தையும் தொகுத்து 1944-ல் “கப்பலோட்டிய தமிழன்” என்ற பெயரில் இந்நூலின் முதற் பதிப்பை வெளியிட்டேன். இந்நூல் வெளிவருவதற்கு முன்னர் வ.உ.சி.யை "தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை' என்றே அழைப்பது