12
கப்பலோட்டிய தமிழன்
தலைவரை கேளில் வரவழைத்து, அவரது சொற்பொ ழிவுகளால் ஊரில் அமைதி குலையுமெனத் தாம் நினைப் பதால் இனி எந்தப் பொதுக் கூட்டத்திலும் பேசக் கூடாதென எச்சரிக்கை செய்தார். மாஜிஸ்திரேட் டின் எச்சரிக்கையை அவ்வீரர் சிறிதும் மதியாது, அஞ்சுவது யாதொன்றுமில்லை; இனி அஞ்ச வருவது மில்லை" என்ற நெஞ்சுறுதியுடன் தொழிலாளர் கூட் டங்களில் தொடர்ந்து பேசி வந்தார்.
கோரல் மில் வேலை நிறுத்தச் செய்தி மதுரையிலும் பரவியது. கோரல் மில் நிர்வாகத்திற்குட்பட்ட மதுரைப் பஞ்சாலைத் தொழிலாளர்களும் வேலைக்குச் செல்ல மறுத்து விட்டனர். தூத்துக்குடி வேலை நிறுத் தம் ஒரு வாரம் வரை நீடித்தது. கடைசியாக மில் முதலாளிகள் பணிந்து விட்டனர். தொழிலாளர்களின் கூலியை அரைப் பங்கு உயர்த்துவதாகவும், கோய்ப் பட்ட நாட்களில் விடுமுறை தருவதாகவும் முதலாளி கள் வாக்களித்து தொழிலாளர் தலைவருடன் உடன் படிக்கை செய்து கொண்ட பிறகு தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்குத் திரும்பினர். வேலை நிறுத்த நாட்களில் பொது மக்களின் உணர்ச்சியைக் கண்டு பயந்த தூத்துக்குடி வெள்ளையர்கள் இராக் காலங்க ளில் நகரிலிருக்க அஞ்சி பெண்டுபிள்ளைகளுடன் துறைமுகஞ் சென்று இராப் பொழுதைக் கட்பலி லேயே கழித்து வந்தார்களாம். இந்த விதமாக தொழி லாளர்களுக்குத் தலைமை வகித்து ஊரெல்லாம்: புரட்சிக் கனலைக் கிளப்பியவீரர் யார்? அவர்தான் தேசபக்தர் வ. உ. சிதம்பரம் பிள்ளை.