கப்பலோட்டிய தமிழன்
17
வெடிகொடு சுடுதல், வில்லொடு தெறித்தல், அடிபிடி சண்டை அளவில புரிந்தேன்.
பிற்காலத்தில் தமிழினத்தின் வீரத் தலைவராக விளங்க விருக்கும் சிதம்பரம் தமிழகத்துக்கே உரிய வீரவிளை யாட்டுகளை விரும்பிக் கற்றதில் வியப்பில்லையன்றோ! சிதம்பரம் தமது பள்ளிப் பருவத்தில் கட்டுக் கடங் காத காளையாகத் திரிந்து வந்தார். அவரிடமிருந்த துடுக்குத் தனங்கள் சொல்லி முடியாதன. தந்தை உலகநாதப் பிள்ளை, சிதம்பரத்திடம் வைத்த பேரன்பு காரணமாக அவரது பிழைகள் அனைத்தையும் சகித் துக் கொள்வார்.ஆனால், தம்மால் சகித்துக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் நையப்புடைத்து விடு வார். தந்தையார் அடிக்கும் போதெல்லாம் காளை சிதம்பரம் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலே வீட்டை விட்டு ஓட்டம் பிடிப்பார்.
ஒருநாள் ஏதோ தவறு செய்தமைக்காக சிதம்பரத்தை அவரது தந்தையார் கடுமையாக அடித்து விட் டார். சிதம்பரம் பலமுறை தந்தையிடம் அடிபட்டுப் பழகியவர் என்றாலும், அன்று அடித்த அடிகளை அவ ரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனம் புண் பட்டு விட்டது.உடனே து.உடனே துறவு கொள்ளத் துணிந்து விட்டார். மறு கணமே மொட்டை அடித்துக் கொண்டு உடுத்தியிருந்த பட்டாடைகளனைத்தையும் களைந்தெறிந்து பருத்தி உடைக் கோவணத்துடன் பட்டினத்தார் போல் வேடம் பூண்டார்." துறவி " சிதம்பரம் பலநாள் ஊண், உறக்கமின்றி ஊர் ஊராக சுற்றி அலைந்து இறுதியாக மதுரையைச் சேர்ந்தார்.
க
.