கப்பலோட்டிய தமிழன்
49
மல் சொந்தப் பொருள்களை எவ்வாறு விருத்தி செய்வது? மெய் பேச வேண்டு மென்றால்; பொய்யை விலக்க வேண்டும்; நல்லொழுக்கத்தைக் கைப்பற்ற வேண்டு மென்றால், தீ யொழுக்கத்தைக் கைவிட வேண்டும். அது போலவே சுதேசிப்பொருள்களை வளர்க்கவேண்டுமாயின் பரதேசப் பொருள்களைப் பகிஷ்கரிக்கத்தான் வேண்டும். இது சொல்லாமலே தெரிய வில்லையா? குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ள வெள்ளெழுத்தா?
ய
சுதேசிய மென்பது வெறும் பொருள்களோடு நிற் பதன்று. வாணிபத்தில் சுதேசியம்; கல்வியில் சுதேசியம்; ஆட்சியில் சுதேசியம்; இப்படி நமது வாழ்க்கையின் எல் லாத் துறைகளிலும் சுதேசி மணம் கமழ வேண்டு மென் ப ே த எனது உள்ளக்கிடக்கை.
நமக்குள் நேரும் வழக்குகளைக் கூட நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். அன்னிய ஆட்சி அமைத்துள்ள கோர்ட்டுகளுக்கு போகக்கூடாது. ஊருக்கு ஒரு நீதி மன் றம்; தெருவுக்கு ஒரு பஞ்சாயத்து சபை ஏற்படவேண்டும்." பிள்ளையவர்கள் சுதேசிக் கப்பல் கம்பெனியைத் துவக் கியது சுதந்தரப் போருக்குத் துணை புரியவே என்பதை உணர்ந்த ஏகாதிபத்தியம் அவர் மீது வலுவில் போர் தொடுத்தது. எனினும், சிதம்பரனார் கொஞ்சமும் அஞ்ச வில்லை. கலெக்டரின் அதிகார ஆணையையோ காசாசை கொண்ட கம்பெனி நிர்வாகிகளின் கட் டளையையோ அவர் சிறிதும் மதிக்கவில்லை.
முன் ஏற்பாட்டின்படியே மார்ச்சு 9-ந் தேதியன் விபின சந்திர பாலரின் விடுதலைத் திருநாள் திருநெல் வேலியில் சிறப்பாக நடைபெற்றது. கலகம் ஏதும் நிகழாதிருக்கப் போலீஸ் அதிகாரிகள் முன்னெச்சரிக் கையான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். சிதம்பர னாரும் சிவாவும் கலெக்டரின் தடையுத்தரவை மீறிப் பதினாயிரக்கணக்கான மக்களடங்கிய ஊர்வலத்தில் கலந்துகொண்டதுடன் பொதுக்கூட்டத்திலும் பேசி
னர்,