88
கப்பலோட்டிய தமிழன்
யத்தின் ஆணிவேர்களான அகிம்சை, ஒத்துழை யாமை ஆகிய தத்துவங்கள் வ.உ.சிக்குப் பிடிக்க வில்லை. மேலும் சிதம்பரனார், திலகரின் மெய்த்தொண் டர். அவரையே அன்னை, தந்தை,குரு,தெய்வம்
கிய எல்லாமாகக் கொண்டவர். எனவே, திலகரின் கொள்கைக்கு எதிராகக்கிளம்பிய காந்தீயத்தை அவர் ஏற்க மறுத்தது இயற்கையேயாகும். ஆனால், காந்தீ யத்தின் மேலிருந்த வெறுப்பு, காங்கிரஸ் வெறுப்பாக இறுதிவரை மாறவே இல்லை. அவர் ஆயுள் வரை காங்கிரஸ் மகாசபை ஒன்றையே தமது அரசியல் கட்சியாகக் கொண்டு அதன் வளர்ச்சிக்குத் துணை செய்து வந்தார்.
காந்தியடிகளும், தமது கொள்கையை முற்றும் ஏற்க மறுத்த வ.உ.சி. மீது அன்பு செலுத்தி வந்தார். வ.உ.சி.யின் களங்கமற்ற உள்ளத்தை, தன்னலமற்ற தேசபக்தியை அடிகளார் அறிந்ததே இதற்குக் காரண மாகும். வ.உ.சி. தூத்துக்குடியில் புரட்சி நட த்திய காலையில், காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தார். அந்தக் காலத்திலேயே வ.உ.சி.யும் காந்தியடிகளும் கடிதப் போக்குவரத்து மூலம் நட்புக் கொண்டிருந்தனர். பின்னர் காந்தியடிகள் இந் அரசியலில் ஈடுப்பட்ட பிறகு, வ.உ.சி. யுடன் அவர் நேரடியாகத் தொடர்பு வைத்துக் கொள்ள வசதி ஏற்பட்டது.
திய
கல்கத்தா விசேஷ காங்கிரஸில் காந்தியடிகளின் ஒத்து ழையாமைத் திட்டத்திற்குப்பலமான எதிர்ப்பிருந்தும்