பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் 213 மிக்கவனும் வேதக் கடலைக் கடந்தவனும் ஐம்புல வேடரை அடக்கித் தவ வலிமையோடு மெய்யறிவும் பெற்று வாழ்பவனு மாகிய அனுமனுக்கு ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் இன்னார் என்று கண்டுகொள்வது அரியது அன்று. இரலைக் குன்றத்தில் நடந்துவரும் இராம.இலக்குவர்களை மறைவாக நின்று கண்ட அனுமன், "தேவருக்கு ஒர் தலைவர் ஆம் முதல் தேவர் எனின் மூவர்; மற்று இவர் இருவர், "375) என்றும் "இவர்களே தருமம் ஆவார் (3762) என்றும் சிந்திக்கத் தொடங்கி, சில வினாகளுக்குப் பிறகு இன்னும் சில காரணங்களைச் சிந்திக்கின்றான். தென்புலத்து அன்றி, மீளா நெறி உய்க்கும் தேவரோதாம் ' என்றும் கூறியதோடு அமையாது ஒரு முடிவிற்கு வருகின்றான். அம் முடிவுக்குரிய காரணம் வருமாறு; 'சங்கு சக்கரக் குறி உள, தடக்கையில், தாளில்; எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்கக்கும் இல்லை; செங் கண் விற் கரத்து இராமன், அத் திரு நெடுமாலே; இங்கு உதித்தனன் - (3859) தர்க்க ரீதியாக ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ச்சிகளையும் அவற்றின் முடிவுகளையும் கூறிக்கொண்டுவந்து காட்சி, அனுமானம் என்ற பிரமாணங்களின் அடிப்படையில், மானுட வடிவு தாங்கிய இாாமன் திருமால்தான் என்ற முடிவிற்கு அனுமன் வந்ததை இங்குக் காண்கிறோம். இராமனைப் பெற்ற தயரதனும் இராமனை மணந்த பிராட்டியும்கூட இந்த உண்மையை அறிந்தார்களோ என்பது ஐயத்திற்குரியது. முன்பின் பாராமல் இராமனிடம் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமல், துரத்தே இருந்து கண்ட அளவிலேயே தர்க்க ரீதியாக இத்தகைய முடிவுக்கு வரக்கூடிய ஒருவனை, உலகுக்கு எல்லாம் ஆணி’ என்று இராகவன் கூறுவதில் வியப் பொன்றும் இல்லை. இதே அடிப்படையில்தான் மரத்தின் மேலிருந்து, அரக்கியர் நடுவேயுள்ள பிராட்டியைக் கண்டமாத்திரத்தில், அவள் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசு முன்னரே அனுமன் அவள் யார் என்பதுபற்றி ஒரு முடிவிற்கு வருகின்றான்.