பக்கம்:கம்பன் எடுத்த முத்துக்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை 1932 முதல் அவரது இறுதிக் காலம் வரை நேரிடையாகவும், அதன்பிறகு ஆன்ம வடிவில் இருந்துகொண்டே இன்றுவரை நயந்தும், கடிந்தும் என்னை வழிநடத்துபவரும், அண்மையில் இந்நூலை எழுதுமாறு என்னைப் பணித்து ஊக்கியவரும் ஆகிய என் குருதேவர், பல்கலைச் செல்வர், பன்மொழிப் புலவர் டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் திருவடிகட்கு இந்நூலைக் காணிக்கை ஆக்குகின்றேன். ஆசிரியர்.