பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


“பொன்‌ மான்‌ உருக்கொண்டு அப்‌ பெண்‌ மானின்‌ உள்ளம்‌ கவர்வாய்‌” என்றான்‌ அரக்கர்கோன்‌.

“அங்ஙனே ஆகுக” என்று இசைந்து சென்றான்‌ மாரீசன்‌.

இராவணனும்‌ வேறு ஒரு வழியில்‌ சென்றான்‌.

இங்கு யான்‌ என்ன மா மாயம்‌ இயற்றுவது – இப்பொழுது யான்‌ செய்யத்தக்க மா மாயச்‌ செயல்‌ எது? இயம்புக – சொல்வாய்‌; என்றான்‌ – என்று இராவணனை நோக்கக்‌ கேட்டான்‌ மாரீசன்‌; பொன்னின்‌ மான்‌ ஆகிப்‌ புக்கு – பொன்‌ போன்ற நிறங்கொண்ட ஒரு மான்‌ ஆகி அவர்கள்‌ இருக்கும்‌ இடம்‌ சென்று; அப்‌ பொன்னை மால்‌ புணர்த்துக – பொன்‌ போன்ற அச்‌ சீதைக்கு ஆசை உண்டாக்குவாயாக; என்ன – என்று சொன்னான்‌ இராவணன்‌. அன்னது செய்வன்‌ என்னா – அப்படியே செய்வேன்‌ என்று; மாரீசன்‌ அமைத்து போனான்‌ – மாரீசன்‌ அதற்கு இசைத்து சென்றான்‌; மின்னும்‌ வேல்‌ அரக்கர்‌ கோனும்‌ – மின்னும்‌ வேல்‌ தாங்கிய அரக்கர்‌க்கரசனாகிய இராவணனும்‌; வேறு ஒரு நெறியில்‌ போனான்‌ – வேறு ஒரு வழியாகச்‌ சென்றான்‌.


தன்‌ மானம்‌ இலாத
        தயங்கு ஓளி சால்‌
மின்‌ மானமும்‌
        மண்ணும்‌ விளங்குவது ஓர்‌
பொன்‌ மான்‌ உருவம்‌ கொடு
        போயினன்‌ ஆல்‌
நன்‌ மான்‌ அனையாள்‌ தனை
        நாடுறுவான்‌.