பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

பால காண்டம்

தசரதனின் மகன் இராமன் பிறப்பு, மற்றும் அவன் உடன் பிறப்புகளான லட்சுமணன்,பரதன், சத்துருக்கனன் பற்றியும், கூறுகிறது.

சித்த வனத்தில் விசுவாமித்திரன் செய்த யாகத்தைக் காத்த இராமனையும், அரக்கி தாடகையையும் சுபாகுவையும் வதைத்த ஜெயராமனையும் காண்கிறோம்.

மிதிலையில் சிவதனுசை முறித்து, கல்யாண ராமனாகக் காட்சித்தரும் இரகுவீரனைக் கண்டு ஆனந்திக்கிறோம்.

பரசுராமனின் ஆணவத்தை அடக்கிய கோசலராமனை போற்றுகிறோம்.

இராமனின் முடிசூட்டு விழாவுக்கு ஆவலோடு காத்திருக்கிறோம்.