இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
67
கடவுள் வாழ்த்து
உரைக்க வல்லேன் அல்லேன்
உன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக் கண் என்று செல்வன் நான்
காதல் மையல் ஏறினேன்
புரைப்பிலாத பெரும்பரனே!
பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைந்து நல்ல மேன்மக்கள்
ஏத்த, யானும் ஏத்தினேன்.
—திருவாய்மொழி