பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

இரு பரம்பரைகள்


ஜுலியா! என்ன கண்ணு, கோபம்? ஜிம்மி! துஷ்டன் நீ போ! போய்ச் சமாதானம்செய் ஜுலியாவை.

ஜூலி! ஜூலி! இதோ பார் இப்படி! அடடா! புருஷன் மேலே கோபம் வந்துவிட்டால் நம்ம ஜூலியா செய்கிற அட்டகாசம் இருக்கே, சொல்லி முடியாது. எப்படி முறைத்துப்பார்க்கிறாள், பார்! ஜிம்மி, பாவம் கெஞ்சிப்பார்த்துத் தோற்றுப்போய், ஜூலியாவின் கோபம் தானாகத் தணியட்டும் என்று போய்விட்டான்.

"என்ன இருந்தாலும், ஜூலி! உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது!"

"உங்களுக்கும் நாளைக்கு ஒரு புருஷன் வந்தால்....."என்று கேலிசெய்ய ஆரம்பித்தாள், மாரி; தேவா, அவள் காதைத்திருகிக்கொண்டே, "பேசாதே! எப்போது பார்த்தாலும் இந்தக் கல்யாணப் பேச்சே பேசிக் கேலிசெய்வதுதானா வேலை?" என்று, வேடிக்கையாகக் கண்டித்தாள். மாரி, இதுபோல் கலியாணப் பேச்சைக் கேட்டுக் கேலி செய்த எத்தனையோ "தேவா"க்கள், தொட்டிலாட்டி விட்டுத் தூங்கிய குழந்தைக்கு முத்தமிட்டதைப் பார்த்-