இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிரசங்க பூஷணம்!
61
"கவனப்படித்தினது நல்லதுதான். நான் மறந்துதான், போய்விட்டேன். ஆமாம், நினைவில்லை, புன்னைவனநாதர் கோயிலிலே எதைப்பற்றி நான் பிரசங்கம் செய்ய ஏற்பாடாகி இருக்கிறது" என்று புலவர் கேட்டார்.
கொஞ்சம் பயத்துடன் சீடன், "நாட்டியக்கலையின் கேடுகள்" என்றான். பிரசங்க பூஷணத்தின் காதிலே அந்தப் பேச்சுப் புகுந்ததும், அவருக்குப் பிரபஞ்சமே நாட்டியமாடுவது போலிருந்தது! என்ன செய்வார்!!
"சரி! போடா!" என்று, சீடன் மீது காட்டினார், கோபத்தை! வேறு எங்கே காட்டுவது?
"நீ பிறந்தது வெள்ளிக்கிழமை
ராஜாதேசிங்கு
உன் குதிரை பிறந்தது வெள்ளிக்கிழமை
ராஜாதேசிங்கு
சண்டை பிறந்தது வெள்ளிக்கிழமை
ராஜாதேசிங்கு"
என்றபாடல் வேறு அவர் மனதிலே புகுந்து குடைந்தது!