உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#03 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் நந்தன் பெறப்பெற்ற நம்பி! நான் உகந்துண்ணும் அமுதே! எந்தை பெருமானே! உண்ணாய்;.என் அம்மம் சேமம் உண்ணாயே..' 'அம்மம் என்பது கண்ணபிரானுடைய குழந்தைப் பருவத் திற்குத் தகுதியாக யசோதை சொல்வதொரு வார்த்தையாகும். *புவ்வா’ என்றும், "பாப்பம்’ என்றும் குழந்தைகட்குச் சொல்லும் சொற்கபோலே இதுவும் ஒரு சொல். நான் உகந்து உண்ணும் அமுதே: தேவர்கள் உண்னும் உப்புச் ாறு போலன்று யசோதைப் பிராட்டி உண்ணும் அமுதம் அமுதிலும் ஆற்ற லினிய அமுத மன்றோ இது? இப்படிப்பட்ட அமுதுக்கும் அமுதூட்டப் பாரித்து அழைக்கின்றாள். - சப்ாணி கொட்டல்: இதுவும் ஒரு வித இலக்கிய உத்தியாக அமைந்து விடுகின்றது இந்த ஆழ்வார் பாசுரங்களில், குழந் தைகளின் விளையாடல்களில் சப்பாணி கொட்டுதல்’ என்பது ஒரு விளையாட்டு; அதாவது ஒரு கையோடு மற்றொரு கையைச் சேர்த்துக் கொட்டுதல். இந்த விளையாட்டை அக்காத்தில் யசோதைப் பிராட்டி பிரார்த்தித்து அது பவித்ததைப் பிற்காலத்தில் பெரியாழ்வார், மாணிக்கக்கிண்கிணி ஆர்ப்ப, மருங்கின்மேல் ஆணிப்பொன் னாற்செய்த ஆய்பொன் உடைமணி பேணி பவளவாய் முத்திலங்க, பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி ' என்று தொடங்கும் டாசுரத்தைக் கொண்ட திருமொழியில் அதுபத்தார். அது போலவே இந்த ஆழ்வாரும் அதே விளை யாட் ையசோதைப் பிராட்டிநிலையில் இருந்து கொண்டு அதுவக்கின்றார். பாசுரமும் யசோதைப் பிராட்டியின் பேச்சாக 6. பெ. திரு. 10. 4, 1 8. யொழ். திரு. 1. 6: 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/110&oldid=775486" இலிருந்து மீள்விக்கப்பட்டது