உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் ato.go. 3. கின்றார் ஆழ்வார். அசித்தும் எம்பெருமான் படைப்பு; அவன் திருமேனி,

  • அழகர் மலை’ என வழங்கப் பெறும் திருமாவிருஞ்சோலை மலை'யின் அழகில் மங்கை மன்னன் ஆழங்கால் படுவதைக் காண்போம். ஆழ்வார் இம்மலையைச் சினை.வளர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை (பெரி. திரு. 9. 9:2), தேன்அமர் பூம்பொழில்சூழ் திருமாவிருஞ் சோலை (9. 9: 5), தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ் சோலை’ (9. 9: 7 ), சிலம்பியல் ஆறுடை திருமாலிருஞ் சோலை: (9. 9: 4),"திங்கள் மாமுகில்சேர் திருமாலிருஞ் சோலை: (9.9:4) என்றெல்லாம் வருணித்திடுவர். பாசுரப் பகுதிகளில் ஆழங்கால்பட்டு ஆனந்தம் அடைகிறோம், பாசுரங்களில் சோலையுடன் மலைச்சாரல்களில் மலையையும் வருணிக்கும் பகுதிகள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளு கின்றன.

சோலையின் சூழ்நிலை நம்மைத் திருமங்கை மன்னனின் பாசுரங்களில் ஆழங்கால் படச் செய்கின்றது. சோலை மலைச் சாரலில் மூங்கில்கள் விண்டு விரிந்து வளர்ந்துள்ளன; நறுமணம் மிக்க குறிஞ்சி மலர்களில்லுள்ள செவ்வித் தேனில் படிந்த வண்டுகள் இன்னொலியுடன் வட்டமிடுகின்றன (9. 3:2); காலம் உணர்த்தும் சோதிடன் போன்று உரிய காலங்களில் ஆக்கும் மேகமண்டலம்வரை ஓங்கியுயர்ந்த வேங்கை மரங்களும் கோங்கு மரங்களும் அங்குச் சூழப்பெற்றுள்ளன (9. 8: 34); ஒன்றோடொன்று பிணங்கி நிற்கும் விண்ணளாவும் மூங்கில் களின் துணி மலையுச்சியிலுள்ள தேனடைகளின் வாயைக் கிழிப்பதனால் தேனிக்கள் நாற்புறமும் பறந்தோடுகின்றன; அதனால் தேனின் மனம் எம்மருங்கும் வீசுகின்றது. (9. 8: 5): 'வருமழை தவழும் மாலிருஞ்சோலை யில் முகில்கள் ஆழ்கடலில் நீரை முகந்து கொண்டு விண்ணில் ஏறி இடிமுழக்கம் செய் கின்றன; அவ்வொலியைக் கேட்கும் சிங்கங்கள் அது யானையின் பிளிறல் என்று கருதி எதிர் முழக்கம் செய்கின்றன (9. 8 5}; மதங்கொண்ட களிறுகளின் கவுள்களின் வழியே மதநீர் பெருகி வருகின்றது. அதனை வண்டுகள் பருகியும் அதனால் வற்றாது மேலும் பாய்ந்து சாரல்தோறும் வெள்ளமிடுகின்றது (9.8: :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/82&oldid=775679" இலிருந்து மீள்விக்கப்பட்டது