பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம்

170

இனப்பெருக்கம்

ஒன்றாக வளர்ந்தபின் ஒருவகைக் கூட்டுக்குள் தன்னை அடைத்துக்கொண்டு தூங்கிவிடும். அப்போது உரு மாற்றம் நடைபெற்றுச் சிறகுகள் முளைத்து, வண்ணத் துப் பூச்சியாக வெளிவருகின்றது. தவளை இளமைக் காலத்தில் கால்கள் இல்லாததும்,வால் உள்ளதும், நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனைச் சுவாசிப்பதுமான தலைப் பிரட்டையாயிருக்கும். . கடலில் வாழும் சிற்றுயிர்களும் பேருயிர்களும் உருவ மெடுத்தல், கடல் நீரிலேயே பெரும்பாலும் அப்பிராணி களுக்குப் புறத்தே நடைபெறுகின்றது. நிலத்தில் வாழும் விலங்குகளில் உருவமெடுத்தல், முட்டையிடும் ஊர்வனவும் பறவைகளும் நீங்கலாக, மற்றவைகளுக்கு உடலின் அகத்தே நடைபெறுகின்றது. தா.வி.தே. மானிட இனப்பெருக்கம் இனப்பெருக்கத்துக்கு வேண்டிய உறுப்புக்கள் ஆணிலும் பெண்ணிலும் அமைந்திருக்கின்றன (பார்க்க: இனப்பெருக்க உறுப்பு மண்டலம்). பெண்ணின் வலது அல்லது இடது சூல் பையிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஓர் அண்டவணு வெளிவரும். சூல் பைக்கு அருகிலுள்ள சினைப்பாதையின் விரல்களால் அண்ட வணு இழுக்கப்பட்டுச் சினைப்பாதை வழியாகக் கருப் பையை நோக்கிச் செல்லுமாறு உந்தப்படும். ஆணின் விந்தணுக்கள் தம் வால்களை அசைத்துக் கொண்டு, நிமிஷத்திற்கு அரைக்கால் அங்குல வேகத்தில் கருப்பைக்குள் செல்லுகின்றன. அங்கிருந்து அவை சினைப்பாதைகளுக்குள் நுழைகின்றன. ஒரு பாதையில் அண்டவணு இராது. அதனால் அதனுள் போகும் விந்தணுக்கள் இறந்து போகும். மற்றப் பாதையிலும் மாதவிடாய்க்குப்பின் ஒரு குறிப்பிட்ட நாளில்தான் அண்டவணு காணப்படும். அதனால் அப்பாதையினுள் செல்லும் விந்தணுக்களும் அண்டவணு இல்லாதிருந் தால் இறந்துபோகும். அண்டவணு இருந்தால் அதைச் சூழ்ந்துகொண்டு அதனுடன் கலக்க முயலும். அதில் வெற்றி பெறும் விந்தணு அண்டவணுவைத் துளைத்துக்கொண்டு நுழையும். அதன் வால் தவிர மற்றப் பாகம் அண்டவணுவோடு ஒன்றாகக் கலந்து விடும். மற்ற அணுக்களெல்லாம் இறந்துபோகும். இவ்வாறு விந்தணுவுடன் கலந்து கருவுற்ற அண்ட வணு ஏழு நாள் காலத்தில் கருப்பையை அடைந்து, அதன் உட்சுவரில் ஒட்டிக்கொள்ளும். இதைத்தான் கருத்தரித்தல் என்பது. ஆனால் சில சமயங்களில் (1) கருவுற்ற அண்டவணு கருப்பையில் தங்காமல் வெளியே போய்விடும்; (2) விந்தணு சூல் பைக்கே சென்று அங்குக் கருப்பம் உண்டாகலாம்; (3) சினைப் பாதையில் கருவுற்ற அண்டவணு கருப்பைக்கு வராமல் அந்தப் பாதையிலேயே தங்கிவிடலாம்; (4) இரண்டு அண்டவணுக்கள் வந்து இரண்டு விந்தணுக்களுடன் கலந்து இரட்டைக் குழந்தைகள் உண்டாகலாம் [பார்க்க: இரட்டைக் குழந்தைகள்) ; (5) ஒரே அண்ட வணுவுடன் இரண்டு விந்தணுக்கள் கலந்து விபரீதப் பிறவிகளை உண்டாக்கலாம். ஆகவே ஆணின் விந்தணுவும் பெண்ணின் அண்ட வணுவும் கலந்து, ஒன்றாகிக் கருப்பையில் தங்கி ஒன்பது மாதம் வளர்ந்து குழந்தை பிறப்பதே இனப்பெருக்க முறையாகும். ஒவ்வொரு பெண்ணும் சுமார் 30 ஆயிரம் அண்ட வணுக்களுடன் பிறக்கிறாள். அவற்றுள் முதிர்வன முந்நூறு நானூறே. அவ்வாறு முதிரும் வயதையே பருவ வயது என்று கூறுவர். இது 13-15 வயது தொடங்கி 40-50 வயது வரை நடைபெறுகின்றது.

இவ்வாறு சுமார் 30 ஆண்டுக்காலம் மாதம் தோறும் ஓர் அண்டவணு வீதம் வெளிவரினும், வெளிவரும் அண்டவணுக்கள் அனைத்தும் விந்தணுக்களுடன் கலந்து கருவுறுவதில்லை. பெரும்பாலும் இரண்டு மூன்று ஆண்டுகட்கு ஒரு முறையே கருவுறுதல் நிகழ் கின்றது. ஆகவே ஒரு பெண் பெரும்பாலும் பதினாறு குழந்தைகளுக்கு மிகுதியாகப் பெறுவதில்லை. ஆண்மகனிடம் ஒருமுறை வெளியாகும் விந்தில் சுமார் 30 கோடி விந்தணுக்கள் இருக்கும். ஆனால், அவற்றுள் ஒன்று மட்டுமே அண்டவணுவுடன் கலந்து கரு உண்டாக்க உதவுகின்றது. அபூர்வமாக இரண்டு மூன்று விந்தணுக்கள் பயன்படுகின்றன. இனப்பெருக்க உடலியல் (Physiology of Re production): தாவரங்கள் பூப்பதற்கும், பிராணிகள் முட்டையிடுவது அல்லது குட்டி போடுவதற்கும், பெரும்பாலும் ஏறக்குறைய குறித்த காலங்கள் உண்டு. இனம் பெருக்கலுக்குரிய காலம் ஆண்டின் பருவநிலை யையும் சூழலின் நிலையையும் பொறுத்திருக்கிறது. உதாரணமாகச் சென்னையில் மணிக்காக்கை, வைகாசி, ஆளி, ஆடி மாதங்களில் கூடு கட்டுவதைக் காணலாம். தென்மேற்குப் பருவமழை மிகுதியாகப் பெய்யும் மலை யாளக்கரையில் மழை தொடங்குவதற்கு முன்பே சித் திரை வைகாசியிலும், பம்பாய்ப் பக்கமான மேற்கிந்தி யாவில் பங்குனி -வைகாசியிலும், வங்காளத்தில் இன் னும் சற்று முன்பாகவும் கூடு கட்டுகிறது. பொதுவாக இளவேனில் - முதுவேனில் என்னத்தக்க பங்குனி முதல் ஆவணி வரையிலுமுள்ள வசந்தம் - கோடையாகிய பெரும்பொழுதே பறவைகளும், பூச்சிகளும், மற்ற எண்ணிறந்த பிராணி வகைகளும் இனப் பெருக்கச் செயலில் ஈடுபடுங்காலம். வழக்கமல்லாத மிக்க வெப் பமோ, மிக்க குளிரோ உண்டானால், இனப்பெருக்கச் செயல்கள் உரிய காலங்களில் நடவாமல் விரைவாகவே நடந்துவிடும்; அல்லது தடைப்பட்டு நடக்கும். அவ் வாறே இச்செயல்களுக்கு இயைபுடையவாகி, உடலின் உள்ளோ புறம்போ நடக்கும் மாறுதல்களும் விரைந்து நடக்கலாம், அல்லது காலந்தாழ்த்து நடக்கலாம். உயிர்கள் பல்குதல் உணவு அகப்படுதலைப் பொறுத் துள்ளது என்பது பொதுவாகத் தெரிந்ததே. ஆண்டு முழுவதும் ஏறக்குறைய ஒரேவிதமாகக் கால நிலையும் உணவு அகப்படும் நிலையும் இருக்கும் இடங்களிலே இனப்பெருக்கக் காலம் என்பது ஒன்று தனித்துத் தோன்றுவதில்லை. எக்காலத்திலும் இது நிகழலாம். பசிபிக்குப் பெருங்கடலிலுள்ள பிலிப்பீன் போன்ற சில தீவுக்கூட்டங்களில் மெல்லுடலிகளிலும், பூச்சிகளிலும், மற்ற நில விலங்குகளிலும் இந்த நிலையைக் கண்டிருக் கின்றனர். இதற்கு மாறாகப் பறவை முதலிய பிராணி களில் ஒழுங்காக நடந்துவரும் வலசைப் போக்குவரத் துக்கள், முற்றிலுமே இல்லாவிட்டாலும், பெரும்பா லும், அவ்வப்போதுள்ள காலநிலைக்குக் கட்டுப்படா மலே நடந்து வருகின்றன. அவை பிறப்புறுப்புக்களில் உண்டாகும் மாறுதல்களையும் இனப்பெருக்க இயல் பூக்கங்களையுமே நேராகப்பொறுத்திருக்கின்றன (பார்க்க: பறவைகள், வலசை). மொத்தத்தில் இனம் பெருகுதல் சம்பந்தமாகப் பிறப்புறுப்புக்களில் நியத மான காலங்களில் உண்டாகும் மாறுதல்களை நடத்து விக்கும் காரணிகள் இரண்டுவிதமானவை. மேலே சொன்ன புறக்காரணிகள் ஒருவிதம், உயிர்களிலேயே பிறவியிலேயே முக்கியமாகப் பிறப்புறுப்புக்களிலே அமைந்துள்ள அகக்காரணிகள் மற்றொருவிதம். இந்த மாறுதல்கள் என்ன, அவை எவ்வாறு நேர்கின்றன என்று பார்க்க வேண்டும்.