பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனம்

175

இனாம்

அவற்றின் உடலியல் செயல்களிலும் உயிர்ப் பொருளி லும் அடிப்படையான வேறுபாடுகள் இருக்கவேண் டும். ஏனெனில் இவ்விரண்டு இனங்களும்கூடி இனம் பெருக்குவதில்லை. ஆகவே அந்தச் சிறு புடைப்புப் பெரிய உடவியல் வேறுபாட்டுக்கு அறிகுறியாக இருக் கின்றது. குளோரெல்லா (Chlorella) என்னும் ஓரணுப்பாசியில் இரண்டு இனங்களை அவை மூச்சு விடும் விகிதத்தைக்கொண்டே பிரித்துணர முடியும். இதனால், இனங்களைப் பகுத்தறிவதற்கு நெருங்கி யுள்ள இனங்களில் நிலையாகக் காணும் வேறுபாடு களையே கட்டளைக்கல்லாகக் கொள்ள வேண்டும். சில உயிர்களில் இவ்வேறுபாடுகள் படிப்படியாகத் தொடர்ச்சியாக அமைக்கக் கூடியனவாகக் காணப்பட் டால், அவ்வுயிர்கள் பல வகைகளாகப் பிரியும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை யென்று தீர்மானிப்பார்கள். வேறுபாடுகளுக்கு இடையே படிப்படியான நிலைகள் இல்லாவிட்டால் இவ்வுயிர்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை என்பார்கள். பெரும்பாலும் ஒரு சாதியின் வெவ்வேறு இனங்கள் வெவ்வேறு இடங்களிலேயே அகப்படுகின் றன். . ஆகவே உயிரியலில் இனம் என்பதை இவ்வாறு விளக்கலாம். ஓர் இனத்தைச் சேர்ந்த தனியுயிர்கள் ஒன்றையொன்று பெரிதும் ஒத்திருக்கும். மற்ற இன அயிர்களிலிருந்து வேறுபட்டிருக்கும். மற்ற இனங் களுக்கும் இதற்கும் நடுவே வேறுபாடுகள் படிப்படி யாக அமைந்துள்ள உயிர்கள் பெரும்பாலும் காணப் படுவதில்லை. இனங்கள் பெரும்பாலும் தம்முள் ஒன் றற்கொன்று மலடாக இருக்கும். ஓரினம் தன் இயல் பில் பேரளவுக்கு மாறுபடாமல் இருக்கும் தன்மையது. சிறிதளவு மாறுபாடடையும் தன்மையும் உள்ளது. தனக்கு முன்னிருந்த சந்ததியைப் பெரிதும் ஒத்தும், தன்னைப் பெரிதும் ஒத்த சந்ததியைத் தந்தும் வரும். இந்தப் பண்புகள் உள்ள உயிர்த்தொகை ஓர் இனம் எனப்படும். சற்றேறக்குறைய தாவரங்களிலே மூன்று நூறாயிரம் இனங்களும் பிராணிகளிலே பத்து நூறாயிரம் இனங்களும் இதுவரையில் கணக்கிட்டு இருப்பதாகத் தெரிகிறது. இத்தனை உயிரினங்களும் ஆதியிலேயே தனித்தனியாகப் படைக்கப்பெற்று, அப் படைப்புக் காலந்தொட்டே வழிவழியாக வந் திருக்கின்றன என்று நம்பி வந்தனர். இந்த நம்பிக்கை யைத் தனிப்படைப்புக் கொள்கை (Doctrine of Special Creation) என்பர். லின்னேயும் இக் கொள்கையினரே. ஆயின் இக்காலத்தில் முக்கிய மாகச் சார்லஸ் டார்வின் (1809-1882) இனங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் அரிய நூலில் தமது கொள்கையை வெளியிட்டது முதல், இப்போதுள்ள உயிரினங்களெல்லாம் முதன் முதலுண்டான மிக எளிய உயிரிலிருந்தே மாறிமாறிக் கிளைத்துக் கிளைத்து ஒரே அடிமரத்தினின்று பிரியும் பல கிளைகளைப்போல உண்டாயிருக்கின்றன என்றும் இன்றும் புதிய உயிரினங்கள் உண்டாகின்றன என் றும். இனிமேலும் உண்டாகுமென்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பார்க்க: தாவரவியல், விலங்கியல், பரிணாமம். நூல்கள் : G. Reed (and others), Symposium on the Species Concept; American Journal of Botany 10 (1923);G. G. Robson, The Species Problem. மானிட வியல்: மனிதன் உயிரியற் கருத்தின்படி ஒரே இனத்தைச் (Species) சார்ந்தவன். மனித வர்க் கத்தில் காணும் காக்கேசிய, மங்கோலிய, நீகிரோவப் பிரிவுகளும், அவைகளின் உட்பிரிவுகளுமெல்லாம் அந்த

ஒரே னத்தின் வகைகள். இந்த மனித வகைகளை (Races of mankind) இனம் என்ற சொல்லால் மானிடவியலார் குறிக்கின்றனர். இனாம் (Inam) என்பது ஓர் அரபுச்சொல். இது ஆதரவு அல்லது பரிசு என்று பொருள்படும். இதை இந்தியர் மானியம் என்னும் சொல்லால் குறிப்பிடுவர். பண்டைக்கால இந்து மன்னர்கள் மதநிலையங்கட்கும் சிறந்தவர்களுக்கும் நிலமோ அல்லது நிலவரியோ நன் கொடையாகக் கொடுப்பதுண்டு. அவர்கள் நன் கொடை மிகுந்த புண்ணியம் தரும் என்று நம்பினர். இவர்கள் செய்த நன்கொடை அல்லது மானியங்கள் நாடு முழுவதிலும் காணப்படும் பண்டைக் கட்டடங் களிலுள்ள கற் சுவர்களிலும் செப்பேடுகளிலும் வரை யப்பட்டுள். இந்து அரசர்கள் கொடுத்த மானியங்களை முஸ்லிம் மன்னர்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதற்கும், இந்து மன்னர்களைப்போல் முஸ்லிம் மன்னர்களும் தங்கள் பரிவாரத்தார்க்கும் உயர்ந்த அலுவலாளர்க்கும் மானி யங்கள் அளித்தனர் என்பதற்கும் போதிய சான்றுகள் உள்ளன. பிரிட்டிஷ் அரசாங்கத்தாரும் தங்கட்குச் சிறந்த சேவை செய்தவர்க்கு ஜாகிர், சுரோத்திரியம் போன்ற நன்கொடைகளைச் செய்து வந்தார்கள். இது 1822 லிருந்து நடைபெறவில்லை. இதன் காரணமாக இனாம் கமிஷன் அமைக்கப்பட்ட காலத்தில் 120 இலட்சம் ஏக்கர்க்கு மிகுதியான நிலம் இனாம்தார்களிடம் இருந்தன என்று கணித்துள்ளனர். இதில் உண்மையான இனாம்களும் நாட்டின் சீர்கேடான நிலையின் விளைவாகத் தோன்றிய பொய்யான இனாம் களும் அடங்கும். அதனால் இதுபற்றிக் கிழக்கிந்தியக் கம்பெனியார் ஆராய விரும்பியபோதிலும் 1859-ல் தான் இதற்கான விதிகளை வகுத்து இனாம் கமிஷனை அமைத்தனர். இனாம்கள் பலதிறப்பட்டவை. இவற்றை அளவு, தோற்றம், நிபந்தனை, குறிக்கோள் ஆகியவற்றைக் கொண்டு பலவகையாகப் பிரிக்கலாம். சிற்றூர் முழு வதும் கொடுத்தவை பேரினாம்கள். சில நிலங்கள் மட் டும் கொடுத்தவை சிற்றினாம்கள். சிற்றூர் தோன்றிய காலமுதல் உள்ளவை தரப்பாடி இனாம்கள். அரசர் தந்தவை சன்னது இனாம்கள். நிலத்தின் வருமானம் முழுதையுமோ அதில் ஒரு பகுதியை மட்டுமோ இனா மாக அளிப்பதுண்டு, தெய்வபக்தி மிகுந்த பிராமணர்க்குக் கொடுக்கும் சுரோத்திரியம் அவர்களுடைய கல்வியையும் ஒழுக் கத்தையும் பாராட்டுவதற்காம். அவர்கள் தம் புண்ணி. யச் செயல்களாகிய வரியைச் செலுத்தி அரசனுடைய ஆயுளையும் ஆட்சியையும் பெருக்குவார்கள் என்ற நம் பிக்கை இருந்துவந்தது. சில இனாம்கள் சேவைகள் செய்ததற்காகக் கொடுக் கப்பட்டவை. இவை பெயரிலும் நிபந்தனையிலும் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடும். சில இனாம் கள் நாட்டுக்காகச் செய்யப்பெற்ற பொதுச் சேவை களுக்காகத் தரப்பட்டவை. சென்னைக் கவர்னர் சர் ஜார்ஜ் டிரவில்யன் (Sir George Trevelyan) வகுத்தவிதிகளைப் பயன்படுத்தி, இனாம் கமிஷன் நடு நிலைமையில் நின்று இனாம்களை ஆய்ந்தது. ஐம்பது ஆண்டுகட்கு மிகுந்து வழங்கிவந்த இனாம்களே செல்லத்தகுந்தவையாகக் கொள்ளப்பட் டன. இவை மத சம்பந்தமானவையாகவோ தரும சம் பந்தமானவையாகவோ இருந்தால், அவற்றை அரசாங் கத்தார் உறுதிசெய்து, அவற்றிற் கூறிய நிபந்தனைப்படி