பக்கம்:கலைஞன் தியாகம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் 209

என்று முன் கேள்விக்கு வியாக்கியானம் போன்ற மற்றொரு கேள்வியைக் கேட்டேன். அதற்கு அந்தப் பிச்சைக்காரன்தான்் பதில் சொன்னன்; என் பெண்டாட்டி, சாமி” என்ருன். அப்போது அவளைக் கவனித்தேன். அவள் உணர்ச்சியற்ற மரம்போல அதைக் கேட்டுப் பேசாமல் கின்றுகொண்டிருந்தாள். 'அப்படியால்ை அந்தக் குருடன்- என்று கேட்க எண்ணினேன். அந்தக் கேள்வி என் உள்ளத் துள்ளே அமுங்கிவிட்டது. இந்தப் பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப்பற்றி இவ்வளவு ஆராய்ச்சி எதற்கென்று விட்டுவிட்டுப் பேசாமல் புறப் பட்டேன். என் மனம்மாத்திரம் பெருத்த ஏமாற்ற மடைந்த உணர்ச்சியிலே அமிழ்ந்திக் கிடந்தது.

"சி, உலகம் மகா கேவலமானது' என்று சொல் லிக்கொண்டேன். உலகம் முழுதும் அந்தப் பிச்சைக் காரியிடத்தில்தான்் அடங்கியிருக்கிறதா என்ன? என்னவோ பைத்தியக்கார எண்ணம்!

4.

மயிலாப்பூருக்கு நான் போன சில சமயங்களில் லஸ் மூலையில் அவர்களைப் பார்க்க எண்ணுவேன். ஆனல் அவர்களே ஒவ்வொரு தடவையும் பார்க்க இயலாது. ஏதோ இரண்டொரு தடவை மாத்திரம் அவர்கள் என் கண்ணில் பட்டார்கள். அவர்களுக்கு ஒரு தம்பிடிகூட நான் போடவில்லை.

இப்படிச் சில நாட்கள் சென்றன. பிறகு . சேர்ந்தாற்போல் ஒரு மாச காலம் அவர்களைக் காண் முடியவில்லை. சரி, மூன்ருவது பேர்வழி கிட்ைத்

14