உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 3.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் ஆற்காடு கூட்டத்திற்குத் கிடைத்தது! 171 'தினமணி'யில் விளம்பரம் ஆற்காடு நகராட்சித் தலைவர் எனக்கு எத்தனையோ முறை மாலை போட்டிருக்கிறார்! அந்தச் செய்தி, 'தினமணி' யில் வந்ததில்லை! இப்போது அவர் எனக்கு மாலை போடவில்லை; அதனால் அவருக்குத் 'தினமணி'யில் விளம்பரம் கிடை கிடைக்கிறது! ஆகவே, பத்திரிகைக்காரர்கள், கழகத்தில் எந்தச் செய்திகளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரிகிறதல்லவா? என் செய்வது? நம் வீட்டில் இனியவை நடந்தால் எரிச்சல் தாங்காமல் துடிப்பதும், யாருக்காவது தலைவலி - காய்ச்சல் என்றால் தாங்க முடியாத மகிழ்ச்சி கொள்வதும், சில எதிர் வீட்டுக் காரர்களுக்கு பண்பாடாக ஆகிவிட்டதே; அந்த இயல்பை, அவ்வளவு எளிதாக அவர்களால் மாற்றிக் கொள்ள முடியுமா? அவர்களின் போக்கை மாற்ற முடியாது என்கின்ற போது, நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! ஆயிரங்காலத்துப் பயிராம் இந்தக் கழகத்தைக் காப்ப தில், மனக்கசப்புக்களை மறந்து-துரோகச் செயல்களைத் தூள் தூளாக்கத் துள்ளி எழவேண்டும்! எத்தனையோ சோதனைகளைத் தாங்கிக்கொண்ட து கழகம்! அண்ணா காலத்தில் ஒரு 'துரோகச் சக்தி' முளைத் தது! அது நமது அண்ணனையே இழித்தும் பழித்தும் பேசி யது - எழுதியது! "வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது" போல், அதன் செயல் அமைந்தது! இப்போது, அண்ணாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு- அவர் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட