இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
82 கலைஞர் ய எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் கையை எதிர் பார்த்திருக்கும் நம்மால்,' நமது அதிகாரத்திற்குட்பட்டு இவைகளைத்தான் செயல்படுத்த முடிகிறது. இதிலே நமக்கொரு ஆறுதல்! கார்முகில் கைமாறு கருதி மழைக்கரம் நீட்டு வதில்லை. கதிரவனின் கடமையும் அவ்வாறே. நமது பொறுப்புகளை நாம் பொறுமையுடன் நிறை வேற்றுகிறோம் என்பதற்கும்! புயலுக்கிடையிலேயும் படகினைச் செலுத்திப் பழக்கப்பட்டவர்கள் நாம் என்பதற்கும் இந்தச் சாதனைகள் சான்று! இதனைத் தொடர்ந்து செய் வோம். 'தொய்வு' விழாமல் நமது லட்சியப் பயணம் நடைபெற்றே தீரும். அன்புள்ள. மு.க. 5 3 74 - O