கடிதம் 115 "நானும் இந்த வயலிலேதான் வளர்ந்தேன்; பயிரின் பக்கத்திலே துணையாக இருந்துதான் வளர்ந்தேன்; அதனால் என்னை யாரும் அகற்றாதீர்கள்" என்று கழ னியிலே வளர்ந்து விட்ட “களை” து வாதிடுமேயானால், அறிவுள்ள . உழவன், அந்தப் பேச்சில் மயங்கி பேச்சில் மயங்கி விளைச்சலை வீணாக்கிக் கொள்ள மாட்டான். அண்ணாவின் பிறந்த நாள் என்பது ஒரு தனிப் பட்ட மனிதரின் பிறந்த நாள் அல்ல! இந்த மாபெரும் இயக்கத்தின் திருநாள்! தமிழ்ச் சமுதாயத்தின் ஒப்பற்ற விழா நாள்! அந்தநாள் பற்றி எண்ணிடும் போழ்து, கழகம் பற்றி எண்ணிடாது இருந்திடல் என்னால் இயலுமோ? மகிழ்ச்சி பொங்குகிறது நெஞ்சில். அதே சமயம் சோக இந்த நெஞ்சைக் மின்வெட்டுக்களும் கின்றன. "நானிருக்கிறேன்! அஞ்சாதே! அண்ணா நமக்கு துணை நிற்கிறார்!" கிழித்துச் செல் அயராதே! என்று என் தங்க உடன்பிறப்பே! நீ தொண்டர்களின் பாசறையிலிருந்து முழங்குகிறாப். அது எனக்கு மாமருந் தாகிறது. புதிய தெம்பு பிறக்கிறது. நெல்லை கண்டேன். உன் உழைப்பின் நேர்த்தி கண்டேன். சேலம் கண்டேன். உன் செயலின் எழிற்கோலம் கண்டேன். தேனி கண்டேன். எனக்கு உற்சாகமூட்டும் தேன் - நீ! என உணர்ந்தேன். - நீ நடத்தப் போகும் அண்ணன் விழா காண இருக் கிறேன். என் உள்ளத்தை இந்தமடலில் ஓரளவு உனக்குப் உரிய வைத்திருக்கிறேன். கடமை கண்ணியம் கட்டுப்பாடு
பக்கம்:கலைஞர் கடிதம் 4.pdf/125
Appearance