உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முந்நூறு ரூபாய் அம்மாவுக்குக் கண் தெரியாது; அப்பா நடமாட முடியாதவர். ஒரு வருடமாகப் பக்கவாதம்—அக்காள் ஒருத்தி ; விதவை. ஒரு குழந்தையை விட்டு விட்டுச் செத்து விட்டாள். 66 குடும்பத்தைத் தாங்கும் தூண் நான். வெற்றிலை பாக்குக் கடை யொன்றில் பத்து ரூபாய் சம்பளத்தில் வேலை; அதுவும் போய்விட்டது. வேலையிருந்தபோதே வீட்டில் இரண்டு வேளைப் பட்டினி. இப்போது கேட்க வேண்டுமா ? நீங்கள் ஏதாவது வழி செய்யுங்கள்; இல்லாவிட்டால் ஒரு முழக் கயிறுதான் செலவு! என்று கூறிக் கண்ணீர் வடித்தான் அந்த ஏழை வாலிபன். பெயர் மாத்திரம் லக்ஷ்மிநாராயணன். ஆனால் தரித்திர நாராயணனாய்த் துடித்தான். அவன் வேலை கேட்ட இடமோ...பெரிய ஆபீஸ் அல்ல ; அல்லது மில் முதலாளியிடமுமல்ல ; மாதம் நூற்றைம்பது ரூபாய் வருமானமுள்ள ஒரு பள்ளிக்கூட ஆசிரியரிடம். தங்கப்பன் உயர் நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர். நூற்றைம்பதைக் கொண்டு தன் பெரிய குடும்பத்தையே நடத்தக் கஷ்டப்படும்போது, லக்ஷ்மி நாராயணனைக் காப்பாற்ற எப்படித் துணிய முடியும்? தங்கப்பன் இளகிய மனமுடையவர். சீர்திருத்தக்காரர். சீர்திருத்த உலகில் அவரது புனைப்பெயர் மார்க்ஸ். மேடையில் ஏறுகிறார் என்றாலே மக்களிடையே ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். அவ்வளவு சிறந்த பேச்சாளி. ஏழை, ஈவு, இரக்கம் என்றெல்லாம் பேசுகிறாரே நாமும் கொஞ்சம் கை நீட்டிப் பார்க்கலாமே என்று எத்தனையோ -