உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் கனவு இல்லாவிட்டால் அவள் உலர்ந்த உதடுகளில் புன்னகை தலைநீட்டியிருக்காதல்லவா? சுவையான கனவு என்பதால்தான் கண்கள் அப்படி மின்னிக்கொண்டிருக்க வேண்டும். அத்தான் முத்தம் தருவது போன்ற கனவோ- அல்லது முதல்நாள் தந்த நினைவோ - அவள் கன்னங்கூடக் குப்பென்று சிவந்து விட்டது. பல ஒன்றுமில்லை ; மூக்குத்தி வாங்கி வருகிறான் அத்தான். நாளாகச் சேர்த்த காசு மூக்குத்தியாக உருவெடுக்கிறது. துடைப்பக் குச்சியை எடுத்துத் தூர எறிந்துவிட்டுப் பார்வதியின் மூக்கில் அவனே அந்த ஆபரணத்தை அணிவிக்கிறான். கறுத்த மேனியில் அந்த வெள்ளை மூக்குத்தி பளிச்சிடுவது, நீல வானத் தில் நிலா கிளம்புவதை நினைவூட்டுகிறது. "பார்வதி... எங்கே?” என்று அத்தான் தன் உதடுகளை மொக்காக ஆக்குகிறான். பார்வதி யின் இதழ்களும் குவிகின் றன. மொட்டுகள் மோதி மலர்ந்துவிடு கின்றன. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்'-ஒரு முக்கிய பகுதி நடந்தேறுகிறது. கனவு மங்களம் பாடுகிறது. பார்வதி சுய நினைவு பெறுகிறாள். வண்டியில் பானு என் 66 மழை வருது மழை வருது று பாட ஆரம்பித்து விடுகிறது. இரண்டு கனமான மழைத் துளிகள் பார்வதியின் முகத்தில் விழுந்து சிதறின. உலகை அதிரச் செய்யும் - டிகள். வான மனிதனின் கவிழ்த்து விட்டதுபோல மழை-இமயம் உருண்டு விந்தியத்தில் மோதிடுவது போன்ற அதிர்ச்சி. அகோரச் சிரிப்பு பயங்கர மின்வீச்சு-கடலைக் பார்வதிக்கு பானு நனைந்து விடுவாளே என்ற பயந்தான். பாவம்-அந்த ஏழைக்கு எஜமான் வீட்டில்-இல்லை, இல்லை குழந்தையின்மேல்- அவ்வளவு பாசம். மனித வர்க்கம் என்பது ஏழைக்கும்பல்தானே! பணக்கார மனிதர், மிருகக் கூட்டம். அதில் மனிதர்களும் தவறிப் பிறப்பதுண்டு. ஏழை மனிதர் குழுவில் துன்பம் தாங்கமாட்டாமல் மிருக வளர்ச்சியடைவோரு முண்டு. அந்த வளர்ச்சி இன்னும் பார்வதியைப் பீடிக்கவில்லை. இதெல்லாம் அவருக்கு ரஷ்யப் பேச்சு என்பார் நல்லக்கண்ணுப் பிள்ளை. ரஷ்யா என்றால் அவருக்கு விஷம் சாப்பிடுகிற மாதிரி. பார்வதி நன்றாக நனைந்து விட்டாள். குழந்தைக்கு ஒரே பயம் ; அலற ஆரம்பித்துவிட்டது. மரத்தடியில் நின்றுவிட்டாள்