உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரிஜினலில் உள்ளபடி 113 போட்டுவிட்டான். பின்னால் வந்த வேலைக்காரன்! அந்த அடிமையின் நிலைகண்ட கந்தசாமியின் தொண்டைக்குழி விம்மிற்று. செட்டியார் வாயிலிருந்து எப்படி விமர்சனம் வரப் போகிறதோ என்று வாய் பிளந்தபடி நின்றார் மானேஜர். பேஷ், ஜோராயிருக்கு ; பத்தாயிரம் நோட்டீஸ் போடுங்க 66 " 99 “ எஸ் ” மானேஜர் கூனன்போல் நின்றுகொண்டிருந்தார். செட்டியார் வேலைக்காரனைப் பார்த்து, "டேய்! ரத்தினம் இங்கேயே இருந்து நோட்டீசை யெல்லாம்...வாங்கி..." 66 66 " சுவத்திலே ஒட்டி விடுகிறேனுங்கோ ” அடமடையா !...... இது ' வால்போஸ்ட்டர்’ இல்லைடா, தெருவுக்குத் தெரு கொண்டுபோய்க் கொடுடா ; பத்தாயிரம் நோட்டீசும் செலவாகி விடணும்... ஆமாம் 66 சாயந்திரத்திற்குள்ளே "உத்தரவு எஜமான் மானேஜர் தலை வணங்கிக் கும்பிட்டு வழியனுப்ப, ராமநாதன் செட்டியாரின் கார் பறந்தது. 66 ஓய்! மிஷின்மேன்! பத்தாயிரம் ' நோட்டீஸ்' உடனே போடு. 'புளு மையில் போடு... ம்... ஓய்! கம்பாசிட்டர் !... நோட்டீசைத் தயாராக்கிக் கொடு... சீக்கிரம்” மானேஜர் அவசரத்தால் குதித்துவிட்டுச் சாப்பாட்டுக்குப் புறப்பட்டார். கந்தசாமி, மாதிரித்தாளுடன் உள்ளே சென்றான். அச்சுக் கோவையை எடுத்து இரும்புச் சட்டத்தில் பொருத்தி னான். அப்போது அவன் கைகளில் சிறிய நடுக்கம் காணப்பட்டது. அவன் முதலில் கோத்திருந்த சில எழுத்துக்களைப் பிடுங்கினான். வேறு எழுத்துக்களைப் பொ றுக்கி அந்தக் காலி இடங்களில் அமைத்தான். ...... அச்சு இயந்திரத்தில் இரும்புச் சட்டம் ஏறிற்று. ஒன்று... இரண்டு, மூன்று... நூறு ஆயிரம் பத்தாயிரம்... நோட்டீஸ் 'கள் அடித்து முடிந்தன. கந்தசாமியே அதை எடுத்துக் கட்டிக் கொடுத்தான். வேலைக்கார ரத்தினம், விளம் பரச் சுமையோடு நடையைக் கட்டினான். செட்டியார் உத்தரவுப் 5-8