உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபலம் காற்றைக் கிழித்துக்கொண்டு 'இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ் திருச்சி நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. சென்னையில் இரவு 8 மணிக்கு வண்டியில் ஏறியவர்கள் அலுப்போடும், களைப் போடும் போராடிக் கொண்டு முதுகை வளைத்துக் கொண்டே அமர்ந்திருந்தனர். சென்னை ரயில் நிலையத்தில் இடம் வாடகைக்கு விடும் பொடிப்பயல்கள் பலருண்டு. அவர்கள் தங்கள் வாழ்க்கையை இப்படியே நடத்திப் பழகிக் கொள்ளுகிறார்கள். போல ,, . 66 வண்டியில் ஏறியோ- அல்லது ஏறாமல் ரயில் மேடையைச் சுற்றிக்கொண்டோ இடம் அகப்படுமா என்று தவித்துக் கொண் டிருப்பவர்களிடம், கதைகளில் பகவான் 'பிரத்யட்சமாவது ஒரு பொடியன் வந்து நிற்பான். சாமி, இங்கே வாங்க நல்ல இடம் என்பான். அவன் கூடச் சென்றால் போதும்; வண்டிக்குள் அருமையான இடத்தைக் காட்டிப் பலகையில் அவன் விரித்திருந்த ‘பட்டு மெத்தை'யை எடுத்து முண்டாசு கட்டிக் கொள்வான். அந்த இடத்தில் தூங்குவதற்கு-டிக்கட் பணம் போக - அவனுக்கு ஒரு நாலணா வாடகை. இப்படிப் பல பையன்கள் வாடகை வியாபாரம் நடத்துவார்கள். அவர்கள் கண்ணில் அகப்பட்டுக் கருணைக்குப் பாத்திரமான பிராயாணிகள் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தப் பாக்கியம் கிடைக்காத பலர் கண்ணுக்குள் நுழைந்து இமைகளைப் பிடித் திழுத்து மூடும் உறக்கத்தை எதிர்க்கத் துணிவற்று ஒருவரோ டொருவர் மோதிக் கொண்டிருந்தனர். கழுத்தில் நிற்கச் சக்தி