உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இருந்தவர்கள் தார்கள். கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் தூக்க மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருந் மூர்த்திக்கு ரயிலில் கிடைத்த புதுப் பாட்டியின் வாயிலிருந்து 'புஸ் புஸ்' என்று மூச்சு வந்துகொண்டிருந்தது. சந்திரா, குழந்தையைக் கீழே போட்டுத் தூங்க வைப்பதற்காக முயன்றாள். குமரேசின் தோளிலிருந்த துண்டை எடுத்துப் பலகைக்குக் கீழே விரித்துத் தானும் கீழேயே படுத்துக்கொண்டாள். குழந்தையை யும் பக்கத்தில் படுக்கவைத்துக்கொண்டாள். அவள் படுக்கும் போதே குமரேசைப் பார்த்து வழக்கமான புன்சிரிப்பைக் கொட்டிவிட்டுச் சாய்ந்தாள். ஆனால் குமரேஸ் பதிலுக்குச் சிரிக்கவில்லை. அவன் நெஞ்சு குமுறுவது அவளுக்கு எப்படித் தெரியும்? எதிரேயிருந்தவனுக்கு இப்போது தலையைக் குனிய வேண்டிய வேலை ஏற்பட்டது. கண்களை மூடிக்கொண்டு தூங்க முயலும் சந்திராவின் முகத்தில் அவன் எந்தத் தனியழகைக் கண்டானோ தெரியவில்லை. ஒரே ரசனை தான்! அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. வயிறு காய்ந்து வாடுபவனுக்கு எதிரே வட்டில் நிறையப் பொங்கலை வைத்தால்...? அந்த நிலைபெற்றான். அவன் உணர்வு ஒரு நிலையில் இல்லை என்பது அவன் அசைவு களிலேயே பளிச் பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. சந்திரா வின் தனிப்பார்வை வேறு அவனைப் பம்பரமாக ஆட்டிவைத் திருந்தது. அவனுக்கு அன்று ஒரு நல்ல வாய்ப்புதான். எத்தனையோ பெட்டிகளைத் துருவிப்பார்த்து இதுபோன்ற ஒரு நல்ல இடம் கிடைக்காமல் கடைசியில்-நட்சத்திரத்துக்குக் குறி வைத்தபோது சந்திரனே விழுந்து விட்டதுபோல-கிடைத்த இடமல்லவா இந்த இடம்? தூங்கும் சந்திராவை இவன், ரசித்தான்-ரசித்தான்-அப்படி ரசித்தான் ! இந்த ரசமான கட்டத்தில்தான், குமரேஸ் முக்கால் கண்ணை மூடிக்கொண்டு நடப்பவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். சந்திரா எப்படியும் கையுங்களவுமாகப் பிடிபட்டுவிடுவாள் என்று துடித்துக்கொண்டிருந்தான். எதிரே இருந்தவன் குமரேசை அடிக்கடி பார்ப்பதும் தன் கால்களால் அவள் கையை மெதுவாகத் தீண்டுவதும் மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்துச் சும்மா யிருப்பதுமே வேலையாயிருந்தான்.