உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைத்தொட்டி 66 35 கூட்டியே முன்னூறு ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டானாம்; எவனோ ஒரு எத்தன். ஒரு எத்தன். அவன் பெயரும் தெரிய வில்லை. அந்தப் பெண்ணின் பெயரும் தெரியவில்லை. இருவரின் பெயரும் அதில் இல்லை. அவை கிழிந்து போய்விட்டன. யாராயிருந்தால் என்ன ; எங்கள் டிபார்ட்மெண்ட்” விஷயம் என்பதை மட்டும் புரிந்துகொண்டேன். யாரிடம் முறையிடப் பட்டதோ அவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை என்பதற்கு அடையாளமாக அந்த மடலை என்னிடம் தூக்கி எறிந்து விட்டுப் போய்விட்டார். அந்தோ! பரிதாபம்! அந்தப் பெண் என்ன ஆனாளோ! அவளை நான் பார்க்காமலே இருக்க விரும்புகிறேன். அவளைப் போன்ற அபலைகளை மட்டுமல்ல ; பொதுவாக மனிதர் களைப் பார்ப்பது என்றாலே எனக்கு வரவர வெறுப்பாகி விட்டது. அவர்கள் பொறுமையற்றவர்கள்-அலட்சியப் புத்தி படைத்த வர்கள் - வெறிகொண்டவர்கள்-விவேகத்தின் விரோதிகள் என் றெல்லாம் சொல்லத் தோன்றுகிறது. என்னுடைய நிழலிலேயே வாழ்ந்து கொண்டிருந்த கொண்டிருந்த நன்றி மறந்த ஒரு மனிதனைப்பற்றி நினைத்தாலே எனக்குக் கோபம் பொங்குகிறது. எங்கிருந்தோ 66 66 ஒரு நாள் வந்தான்; சரியாக நடக்கமுடியவில்லை. உடம்பெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. என்னையும் மீறி அவன் மீது ஒரே துர்நாற்றம்! போனால் போகிறது என்று சகித்துக் கொண்டு யாரப்பா?" என்று கேட்டேன் "பார்த்தாலே தெரியவில்லை... இந்த நாட்டு மன்னர்களிலே ஒருவன் ; உன் பக்கமிருந்து ராஜ்ய பரிபாலனம் செய்ய வந்திருக்கிறேன். கொஞ்சம் நிழல் கொடுப் பாயா?" என்று அவன் என்னைப்பார்த்தான். நிழல் தருகிற அளவுக்கு நான் என்ன அவ்வளவு வளர்ந்து வளமாகவா இருக் கிறேன். வேண்டுமானால் என் மறைவில் ஒதுங்கியிருந்து ராஜரீகம் செய்வாயாக!" என்றேன். அவனும் பத்து நாட்கள் என் மறை விலேயே உட்கார்ந்தான்-படுத்தான்-தூங்கினான்-சாப்பிட்டான்! அங்கிருந்தவாறே அவன் சர்க்கார் நடந்தது. பல்லைக்காட்டி அவனது அரசாங்கத்திற்குத் தேவையான வரிகளைக் காசாகவோ பணமாகவோ வாங்கிக் கொண்டிருந்தான். போகிறவர்களிடம் பத்துநாள் எனக்கும் அவனோடு நல்ல பொழுது போயிற்று. அவன் பாடுகிற சினிமாப் பாட்டுகள் நாடோடிப்பாட்டுகள் இவைகளில் நான் என்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் ரவு இந்தப் பரதேசி மகாராஜா ஒரு பெண்ணைத் தன்னுடன் அழைத்துக்கொண்டுவந்தார். நான் தூங்குவதுபோல்