பக்கம்:கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக் களஞ்சியம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக் களஞ்சியம் 3

கட்டுரைகள் ஸ்தலங்களுக்கு வழிகாட்டிகளாக அமைந்திருக் கின்றன. அதோடு நின்றுவிடவில்லை. அவை வரலாற்று ஆராய்ச்சி செய்கின்றன. கல்வெட்டுக்களின் நுணுக்கங்களைக் காட்டுகின்றன. பக்திப் பாடல்களுக்கு இலக்கிய விளக்கம் கொடுக்கின்றன. சிற்பக் கலையின் அழகுகளை எடை போடுகின்றன. மூர்த்திகளை அவனிருக்கும் வண்ணத்திலேயே எடுத்துக்காட்டுகின்றன.

நூலைத் தொட்டத்தொட்ட இடமெல்லாம் கற்பூர வாசனை வீசுகிறது. சந்தனமும் ஜவ்வாதும் மணக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம், அபிஷேகம், அலங்காரம் எல்லாம் பக்திக்கும் ஞானத்திற்கும் இன்றி யமையாத சாதனங்கள் என்பதைக் கட்டுரைகள் நிலைநாட்டுகின்றன.

மேலும் ஆசிரியருடைய சமரச நிலை பெரிதும் போற்றத் தக்கதாக இருக்கிறது. வைஷ்ணவ வேஷம் போட்டுக் கொண்டு, சைவத்தை ஒரே செந்துக்காகத் துக்குவார். சைவ வேடம் பூண்டு. வைஷ்ணவ விளக்கம் செய்வார். இப்படி ஆயிரம் மூர்த்திகளைப் பற்றியும் பேசினாலும், இறைவன் ஒருவன்தான் என்ற உண்மையையும் உணர வைத்து விடுகிறார், எப்படியோ.

ரசிகமணி டி.கே.சி சொல்லுவார்கள். பொதுவாக, ஸ்தல யாத்திரை என்றால், கோயில் குளம், மூர்த்தி, பக்தர் குழாம் இவைகளை அனுபவிக்கப் போவதுதான். அதில் நல்ல ஆனந்த அனுபவம் உண்டு என்று.

அத்தகைய ஆனந்த அனுபவத்தை ஸ்தல யாத்திரை போகக் கொடுத்து வைக்காவிட்டாலும் இந்த நூலைப் படிப்பதன் மூலம் நான் அடைகிறேன். தமிழர்கள் ஒவ்வொருவரும் நான் பெற்ற இன்பத்தை அடைவார்கள் என்றும் நம்புகிறேன்.

ஜட்ஜ் பங்களா எஸ். மகராஜன்

வேலூர் 15.3-60