இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாடி, பக்தி சேர்த்த பாவனையைப் பாட்டின்மூலம் வெளிப்படுத்திக்கொண்ட கனிச்சாறு இது.
- “குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
- மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
- கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
- வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்!”
“ஆண்டாள், இது என்ன விகாரமான பாட்டு? நிறுத்து, நிறுத்து...” என உத்தரவு போடுகிறாள் சிந்தாഥணி.
- சபாஷ்!
- சிந்தாமணி கெட்டிக்காரி!
சிந்தாமணி கெட்டிக்காரியா? யார் சொன்னர்கள்? நான்தான் சொன்னேன். ஏன்? அவள் விகாரமான பாட்டைப் பகுத்து அறிந்த பக்குவத்தைக் கண்டு மகிழ்ந்து கெட்டிக்காரி என்று சொன்னேன்.
- ஆனால் நடந்தது என்ன?
- நடந்தது ஒன்று.
- நினைத்தது ஒன்று.
இந்த ‘ஒன்றும் ஒன்றும்’ ஒட்டுறவு சேர்க்கும் கதை இருக்கட்டும். முதலில் கதையைத் திருவாய் மலர்ந்தருளலாமா?
- ஆகா!
சிந்தாமணியின் புகைப்படத்தைக் கண்டதுமே ‘பூந்தோட்டம் கண்ட பொன்வண்டானான்’ அழகப்பன்.
146