உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னிசைப் பாமாலை

27


புண்ணெடுத்த வேல்வலவர்
போந்தடர்த்த போர்ப்பதுறில்
மண்ணெடுத்து வீசுநபி
மார்க்கநிலை கண்டோரே
பண்ணெடுத்த செந்தமிழ்சேர்
பாவெடுத்துப் போற்றுமெனைக்
கண்ணெடுத்துப் பார்த்தருள்வீர்
கல்வத்து நாயகமே!


வரைகண்ட பூண்முலையும்
வாள்விழியும் நீள்குழலும்
நிரைகண்ட வெண்ணகையும்
நேர்ந்தினைவே னுய்வேனோ
திரைகண்ட முத்தமிருள்
சித்தெழுந்தெல் செய்சீழக்
கரைகண்ட வாழ்வுடையீர்
கல்வத்து நாயகமே!


சுழலிலிடு பஞ்சென்னச்
சூழ்கமரிற் பாலென்னத்
தழலிலிடு நெய்யென்னத்
தத்தளித்து-மாளாதுந்
நிழலிலிடு தூளென்ன
நின்றுய்ய நன்றுவந்தேன்
கழலிலிடு தோலாக்கீர்
கல்வத்து நாயகமே!