இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40
கல்வத்து நாயகம்
வண்டிருந்த பூவென்ன
வந்துவந்தும் பொன்னடிக்கே
தொண்டிருந்த வேழைநெஞ்சஞ்
சோர்விருக்கத் தூயவுடற்
கொண்டிருந்த துன்பமுற்றுங்
கூர்ந்துறுத்தி நின்றதையோ
கண்டிருந்துங் காவீரோ
கல்வத்து நாயகமே !
பொய்யாளு மாதரிடு
போகவலைக் குள்ளாகி
மையாளும் வஞ்சநெஞ்ச
வன்கனனாய் நில்லாமன்
மெய்யாளு நூதனவி
வேகியென வாய்த்தநுந்தங்
கையாளு மாகேனோ
கல்வத்து நாயகமே !
முத்துதற்கோ நும்மடியின்
மொய்ப்பதற்கோ முற்றுமுமை
நத்துதற்கோ நாடுதற்கோ
நண்ணிநின்றார் பல்கோடி
பொத்துதற்கோ வாய்மூடிப்
போற்றுதற்கோ போந்தவெனைக்
கத்துதற்கோ விட்டீரென்
கல்வத்து நாயகமே !