உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கல்வத்து நாயகம்


மருத்துவந்து நோயகற்று
வார்போலுந் தாட்கமலம்
பெருத்துவந்து தீதகற்றிப்
பேறுபெற்றார் பல்கோடி
திருத்துவந்த வத்துறைக்கே
சிந்தைசெலுத் தாதலுத்தேன்
 கருத்துவந்து காப்பீரெங்
கல்வத்து நாயகமே !


நிலங்கரைவி யாபார
நீநிதிய முற்றுமுற்றும்
புலங்கரைவி யாவெளிய
புல்லனுக்கு மாக்கமுண்டோ
மலங்கரைவி வேகமிலா
வம்பர்பவ வாருதிக்கோர்
கலங்கரைவி ளக்கமொத்த
கல்வத்து நாயகமே!


உள்ளலம்பு மாசைமுற்று
முற்றுவந்து நும்மடிக்கே
கொள்ளலம்ப வைத்தவென்னைக்
கூர்ந்தெழுந்து காருமையா
புள்ளலம்புந் தண்டலைசூழ்
பொற்கமல வாவியெலாங்
கள்ளலம்புங் கீழைநகர்
கல்வத்து நாயகமே !