உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கல்வத்து நாயகம் (கவிதைகள்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னிசைப் பாமாலை

45


அந்தரத்தி லம்புவியி
லாயபல சீவர்தம்மைத்
தந்தரத்தி லாக்கவல்ல
சால்புமிக்க தக்கோரே
எந்தரத்தி லுள்ளசில;
வேழைகளு மின்னலறக்
கந்தரத்திற் காத்தருள்வீர்
கல்வத்து நாயகமே!


பாட்டாற்றி வந்தபல
பத்தர்மனப் பான்மைமுற்றுங்
கேட்டாற்றிக் காக்கவல்ல
கேண்மைமிக்க மேலோரே
தேட்டாற்றி வந்தவெனைச்
சேர்த்தருள்வீர் தீயபவக்
காட்டாற்றில் வீழ்த்தாமல்
கல்வத்து நாயகமே!


வான்கானப் பாதலமு
மண்டலமு மென்டிசையுந்
தான்காண வாய்ந்தபுகழ்
தந்துதவ வந்தோரே
நான்காண முப்பொழுதும்
நாடிவந்து நும்மலர்த்தாட்
கான் காணக் காட்டுகிற்பீர்
கல்வத்து நாயகமே!