உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 நிலைமை, ஆட்சியின் அலங்கோலம் அவ்வளவுக்கு மோசமாகி விட்டது, என்பதுதானே, இதற்குப் பொருள், அதன் விளைவுதானே, இத்தூற்றல் பாணங்கள்! காங்கிரசைப்பற்றி எங்கள் எண்ணம் என்ன ?• காங்கிஸ், நாட்டில் விழிப்புணர்ச்சியை ஊட்டி யது. தேசீயப் போராட்டத்தை நடத்தியது! நாட்டு மக்களிடையே நாட்டு விடுதலை கீதத்தை எழுப்பியது. தேசீயக் கனலைக் கக்கியது. வெள்ளை ஏகாதிபத்தியம் இந்த நாட்டை விட்டு வெளியேற உழைத்தது. உ மேலே குறிப்பிட்டவற்றை நாங்கள் மனதாற, மறுக்கவில்லை, மறைக்கவுமில்லை. காங்கிரசின் இன்றைய நிலை, சுதந்திரம் பெற்ற பின்னர் உள்ளநிலை, என்ன? காங்கிரஸ் இருப்பதா? கூடாதா? காங்கிர ஸுக்கு ஓட்டுப்போடலாமா? கூடாதா? காங்கிரஸ் சாகவேண்டும் ; சாகடிக்கப்பட வேண் டும். ஏன்! காங்கிரஸ் அழியவேண்டும்; அழிக்கப்பட வேண் டும்! ஏன்? காங்கிரஸ் ஒழியவேண்டும் ; ஒழிக்கப்பட வேண் டும். ஏன்?