உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பணிக்கும், உறை விடமாயிருந்த 37 பொதுத் தொண்டிற்கும் காங்கிரஸ் இன்று, பதவி வேட்டைக் காடாக, கள்ளிகள் நிறைந்ததாக ஆகி விட்டது. வீரர் சிதம்பரனார் இருந்த காங்கிரஸ் இன்று சில்லரைச் சிவஞானங்களாலும், சின்ன துகளாலும் காப்பாற்றப்படவேண்டிய நிலைக்கு வந்துவிட்டது! காங்கிரஸ் கரைகிறது, கரைந்து கொண்டேவரு கிறது! காங்கிரஸ், கருத்தில், பண்பில், பணிபுரியும் பாதையில் தவறிவிட்டது. தகாதவழியில் ஆழப் பதிந்துவிட்டது. சுயநலம், சூழ்ச்சி, சுரண்டல், பதவி, பர்மிட்டு வேட்டை, என்பனவே, இன்றைய காங்கிரசின் இலட்சணமாக மாறி விட்டது. இதைக் கண்டு நாங்கள், காங்கிரசிடம் அன் புள்ள நாங்கள் பரிதாபப்படுகிறோம். ' ஐயோ பாவம்' என்று அனுதாபப்படுகிறோம். அன்பு காட்டும் நாங்கள், பரிவு காட்டும்நாங்கள், அழிக்க வேண்டும் என்றும் கூறுகிறோம். 'அழிக்கவேண்டும்' என்பது, அன்பின் விளை வால் ஏற்பட்ட முடிவுதான். அன்பு, எனவேதான், அழிக்கப்படவேண்டும் காங்கிரஸ் என்கிறோம். 3