உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மன மனவளம் இழந்தோர் இன்று மீண்டும் வளம் பெற்று தமது திரு இடத்தைப் பெற்றே தீரு வோம் என்று தீரப் போர்ப்பரணி பாடுகின்றனர். இந்தப் போர்ப்பரணியை மறைத்திடவோ, மருட் டிடவோ எந்தக் கனகவிசயர்களாலும் முடியாது! மீண்டும் வில்லவன் கோதை விருந்துகள் கி கிடைக் காது! கம்யூனிஸ்டுகள் நம்முடைய விரோதிகள் அல்ல; ஆனால் நம்முடைய விரோதத்தை அவசியமற்ற முறையிலே ல் உண்டாக்கிக்கொள்ளும் பணியிலே இறங்குகிறார்கள்! கம்யூனிஸ்டுகள் நம் ஒத்துழைப்பைப் பெற வேண்டியவர்கள் ; ஆனால் ஆனால் நம்மிடமிருந்து நம்மிடமிருந்து விலகி ஓடுகிறார்கள்! நம் இலட்சியம் தவறு என்பதோடு அவர்கள் நிற்கவில்லை. இலட்சியம் தவறு என்பதையும் கடந்து, கம்யூ னிஸ்டுகள் செய்த தியாகத்தை வைத்துக்கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பிரசாரம் செய்கின்றனர்; பலம் பெறுகின்றனர், என்றும் தோழர் ஜீவானந்தம் பேசினாராம். 'ஐயோ, பாவம்! ' இந்த நிலைக்கா உங்கள் பிரச்சாரம் இறங்கிவிடவேண்டும். நான் கூறுகிறேன் கம்யூனிஸ்டுகள்,பட்ட கஷ்ட கஷ்டங்களைப்பற்றி, அடிதடிகளைப்பற்றி, அடக்கு