உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 . KAMARAL NEWS MAP 75 36/18 Kaliva Chetty St புரட்சிப் போர்மூYCERMSவிASால் மட்டும் முடிந்ததா? மனவளம் மனவளம் பெறவேண்டாமா,மக்கள் ? " 6 மதத்திலே, மார்க்கத்துரையிலே அறிவு விளக் கம்பெற்று, 'ஆண்டவன் விட்டவழி விதியை வெல் வோர் யார்' என்ற மந்தபுத்தி மறைய வேண்டாமா? தன்னம்பிக்கை, தன்னைப்போலப் பிறனும் மனிதன், பிறப்பு ஒன்றே, குலமும் ஒன்றே என்ற உண்டாகவேண்டாமா? உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் யார்? கோட்பாடு நாட்டிலே ஆண்டவன்பேரால் முடங்கிக் கிடக் கும்ஆயிரமாயிரம் செல்வக் களஞ்சியங்களை நாட்டுக்கு நாட்டு மக்களுக்குப் பயன்படுத்திட, மக்கள், மன வளத்தைப் பண்படுத்தினால்தானே, நடக்கும்; முடி யும்? யோசியுங்கள். இதைச் செய்பவர் யார் ? யார் ? என்று கேட்கி றேன்? நாங்கள்தானே? அறிவுத் தெளிவு, பகுத் தறிவுப் பண்புதானே எதற்கும் காரணம் என்ற, பொது உடைமையின், உண்மையான, அடிப்படைப் பண்பைப் பரப்புபவர்கள் யார்? விதியல்ல, வேதனைக்குக் காரணம் ; நாட்டிலே சிலர் செய்திடும் சதிதான் என்று கூறும் துணிவு யாருக்கு உண்டாகியிருக்கிறது, எங்களைத்தவிர? ஆயிரம் ஜாதி, அதன் நடுவே பொது உடைமை ஜோதி! உண்டாகுமா? உண்டாக்கத்தான் முடியா? உண்டானால்தான் உருவாகுமா ? உருவாக்கத்தான் முடியுமா? மக்கள் மனத்தெளிவு பெறாதவரையில்? மனிதன் மனிதனாக மதிக்கப்படும் வரை, தோழமை,மனிதாபிமானம், தன்னைப்போன் றவன் தான் மற்றவனும், பிறப்பில், உழைப்பில் என்ற