பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 sfr. fr

முடிஞ்சவரை வளைய வருவாள் சிரிப்பாள். சிரிக்கணும்னு ஆரம்பிப்பாள். ஆனால் அது அழுகையாக மாறி முடியும். Histeria அல்ல, சிரிப்பு நரம்பெல்லாம் அழுகை நரம்பாக மாறி விட்டன. அப்படி ஒன்று சாத்யம் என்று இருந்தால் அந்தக் கண்ணதாவியைப் பார்த்தால்தான் நம்ப முடியும். மரகதம், மாம்பழம் மாதிரி, தேங்காய் மாதிரி உள்ளே அழுகிப் போய் விட்டாள். அது மாதிரி ஒண்ணு; சாத்யம்னு இருந்தால்.” துண்டு துண்டா துணுக்குத் துணுக்கா என்னென்னவோ பயம் பயமா

-'பாலா அப்பவே செத்துப் போயிருத்தால் மரகதம் தக்கியிருப்பாளோ என்னவோ? பெத்தது ஒண்ணு, அதுவும் பெண் என்றாலும் நேர்ந்த கஷ்டத்துக்கு ஒரு மட்டாகப் போயிருந்தால் போயிடுத்து, அவ்வளவுதானே! என்ன செய்ய முடியும்? அழுவோம், ஒருவரையொருவர் தேற்றிக் கொண்டு, ஒருவருக் கொருவர் மிஞ்சுவோம். ஆனால் தலைகீழா நடக்க ணும்னு இருக்கே கண்டிப்பா பிராரத்தகர்மான்னு இருக்கத்தான் இருக்கு இந்த ஜன்மத்தில் உன் பங்கு என்று மூட்டையை முடிச்சுக்கட்டி, கழுத்தில் சுமத்தி அனுப்பறான். அதற்காக அவனை, அவன் எவனோ, அவனை ஆயிரம் கசந்துண்டாலும் அவன் நிரூபனை ஆவதே இப்படித்தான். என் குழந்தை அவள் வினையை அனுபவிப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது என் வினை.”

எத்தனை நாள் அடக்கி வைத்துக் கொண்டிருந்ததோ கக்கலும் கரைசலுமாய்க் கரை புரண்டு வருகிறது. தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கிறார்.

சரணடைந்தோர் கதியே இப்படி. அவனோடு வியாஜ்ஜியம் நடத்தினால் முடியுமா? ம ரக தம் வியாஜ்ஜியம் நடத்தினாள். முடிந்தாள். Vengeance is Mine and I will repay. அம்பி முழிக்கிறான், பாவம்