இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാഭ്തു മാ
கைப்பிடித்த நாள்முதலாக்
காட்சியென்ன..! மாட்சியென்ன?
மெய்ப்புகழ்ச்சி! மெய்க்களிப்பு!
மீளாத இன்கனவு!
என்கணவர் வேந்தன்!
எழிலரசி நானவர்க்கு ! 500
பொன்னான வாழ்க்கை !
புதிதுபுதி தாய்இன்பம்!”
'பாட்டென்ன ! ஒட்டமென்ன! பச்சைப் பசும்புல்மேல்
ஆட்டமென்ன! கூத்தென்ன!
ஆன்ற பெருமையென்ன!
அச்சச்சோ! அவ்வாழ்க்கை
ஆடி அடங்கிற்றே!
மிச்சமிந்தப் பிள்ளைதான்!
மேலுமென்ன வாழ்வெனக்கே?" 605
"இங்கிருந்த ஆறும்
இடுகாடும் என்மனத்தில் மங்காத காட்சிகளாய்
மறவா நினைவுகளாய்த்
தங்கிவரும்; ஆங்கவற்றால்
தாழ்ச்சியெலாம் வீழ்ச்சியுறும்:
59