பக்கம்:கழுமலப்போர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

'கழுமலப் போர்' என்னும் இந்நூல், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் கோச் செங்கட் சோழனுக்கும் கழுமலம் என்னும் ஊரின்கண் நடந்த போரை விளக்கமுறக் கூறுவதாகும். தமிழில் வரலாற்று நூல்கள் இல்லை யென்னும் குறையினை இத்தகைய நூல்களே போக்கவல்லனவாகும். இந்நூல் சிறந்த வரலாற்று நூலாகவும், உரைநடை இலக்கிய நூலாகவும், ஆராய்ச்சி நூலாகவும் திகழ்கின்றது.

இத்தகைய வரலாற்று நூலை எழுதுவதற்கு எத்துணைச் சங்க இலக்கியப் பயிற்சி இருக்கவேண்டும் என்பதனை இந்நூலைப் பயின்றோர் நன்கறிவர். கடல் போன்ற பரப்பும் சிறப்பும் அமைந்த சங்க இலக்கியங்களிலிருந்து, கழுமலப் போருக்குரிய குறிப்புக்களைத் தேர்ந்தெடுப்பதென்பது, ஆழ்ந்தகன்ற கடலுள் மூழ்கி அரிய முத்துக்களை ஆய்ந்தெடுக்கும் அருஞ்செயலை ஒப்பதேயாகும்.

இதுபோன்ற நூல்கள் மேலும் பல வெளி வர அன்பர்களும் ஆசிரியப் பெருமக்களும் இந்நூலை ஆதரிப்பதன் மூலம் எம்மை, மேலும் இத்துறையில் ஊக்குவார்கள் என நம்புகிறோம்.

பதிப்பகத்தார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/5&oldid=1357251" இலிருந்து மீள்விக்கப்பட்டது