பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கவிக்குயில் சரோஜினியின்

திறந்த வாயில் அரசியல் அலைகள் எழும்பிப் புரளுமானால், அரசியல் வாதிகளும்-அதிகாரிகளும் குடல் விழுங்கும் உணவாவார்கள்;

சரோஜினி பேச்சு இலக்கியமானால், கல்வியாளர்கள் கிடைத்ததடா கற்கண்டு என்று வாய் நிறையப் போட்டுக் குதப்பி விழுங்குவார்கள்; சுவைத்துத் தின்றிட நேரமாகுமே என்று திக்குமுக்காடி அவசர அவசர விழுங்குகளோடு மேலாய் கேட்கத் தயாராக்கிக் கொண்டு செவிகளோடு காத்திருப்பார்கள்!

ஆட்சியின் அதிகாரிகள், சீமான்கள், இந்திய மத குருமார்கள்; இந்திய பெரு மக்கள்; மாணவ-மாணவிகளது அணிகள் ஆகிய அனைவருமே மீண்டும் எப்போது, எங்கே இளம் கவிக்குயில் குரலெடுத்துப் பாடிடும் நான் எந்நாள் என்று சந்தேகமறக் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.

கற்றோரைக் கவிதைகள் களிக்க வைத்தன; உரை நடைகள் அரசியலாரை உற்று நோக்க வைத்தன. சரோஜினி குரலோ நான் நினைத்தால் சிம்மமாவேன் என்று சீற்ற முழக்கமிட்டது.

சரோஜினி படிப்பு நின்றது; உடலும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையுடன் உறவாடியது; எனவே, சரோஜினி தனது தாயகம் திரும்பி ஓய்வு பெறுவது நலம் என்றனர் டாக்டர்கள். ஆதனால், சரோஜினி நாடு திரும்பிடத் தயாரானார்!

வரும் வழியில் இத்தாலி நாட்டையும், வர்ஜில், தாந்தே போன்ற மகாகவிகள் பிறந்த மண்ணைக் காண விருப்பினார்; சென்றார்!

மைக்கேல் ஏஞ்சலோ, ராஃபேல் போன்ற பெரும் ஓவியச் சக்கரவர்த்திகள் தோன்றிய மண்ணையும் பார்க்க பெரிதும் ஆசைப்பட்டார்-பார்த்தார்!