பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5. பொன்னென்பேன்-சிறு பூவென்பேன்!...

தத்துவத்தை வைத்து உங்களை உருட்டிவிட்ட பின், என்னிடமிருந்து பிறக்கும் இவ்வினா உங்களுக்கு இதமாக இருக்குமே!...

காதலுக்கா விளக்கம் சொல்லத் தெரியாது உங்களுக்கு?...

‘கடவுளைப் போலவே காதலும் கண்ணுக்குத் தெரியாது; எல்லாம் வல்லசக்தி கொண்டது; எங்கும் வியாபித்தது. எல்லாம் உணர்ந்தது!’

என்னுடைய ‘இரண்டாவது கண்ணகி’யில் நான் கூறிய முடிவு இது

இதைக்கூட அண்மைப் படமொன்றில் கேட்கும் வாய்ப்புக் கிட்டிற்று.

வாழ்க, அவ்வசனத் தயாரிப்பாளர்!

சரி:

காதலைப் பார்ப்பதற்கு முன்னம், காதலர்களை பார்ப்போமா?

ஆண்:பொன்னென்பேன்-சிறு

பூவென்பேன்-காணும்
கண்ணென்பேன்-வேறு
என்னென்பேன்?

36