பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இந்த இருவர்களைக் கவிஞர் வாலி அறிமுகம் செய்கின்றபோது அவதார புருஷனில் வரும் இராவணன், சூர்ப்பணகை நம் நினைவிற்கு வருகின்றனர். அங்கு அண்ணனிடமிருந்து எந்தவிதத் தாக் கீது மின்றி சூர்ப்பனகை செயற்படுகின்றாள். இங்கு அண்ணன் சொற்கேட்டு இடிம்பி செயற்படுகின்றாள்! அங்கு சூர்ப்பணகை அழகிய மாதாக மாறி இராமனை அணுகுகின்றாள். இங்கு இடிம்பி அழகி உருவங்கொண்டு பீமனை நாடுகின்றாள். 35. கடோத்கஜன். இவன் அறிமுகம் மிகவும் சிறியதுதான். பாரதப் போரில் ஒருநாள் இரவில் நடந்த போர் அற்புதமானது. அதில் கடோத்கஜனின் போர் விசித்திரமானது. - ஈன்றவள் சொற்கேட்டு இடிம்பியை மணந்தான் பீமன்! மற்றதை கவனித்துக் கொண்டான் காமன்! பீமனுக்கும் இடிம்பிக்கும் பிறந்தது ஒரு பிள்ளை; பேரனை எடுத்துச் சுமக்க-குந்தியின் இடுப்புக்கு கொடுப்பினை இல்லை! அதற்குத் காரணம்அசையுமமலைபோல் இருந்தது-அந்த மதலை; மருட்டும்படிகொடுரமாயிருந்தது-அதன் குதலை!