பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு ஒடிசல் உடல் கொண்டு உலாவரும்-அக்கார அடிசில்; தக்கதொரு குரிசில் கையில் கொடுக்க-பிரமன் படைத்த பரிசில்! வயது பதினாறை-இன்னும் விழுங்காதவள் எவன்மீதும் மோகமாகி-மனக்கூர்மை மழுங்காதவள்; ஆதலால் பொழுது சாய-விரகத்தில் புழுங்காதவள்; பிரேமையெனும் அவஸ்தைக்கு ஆற்றாது அழுங்காதவள்! (I-பக்.255.55) 'பிரகன்னளை எனும் பேடாயிருக்கும் பார்த்தன் இவளுக்கு ஆசானாகிவிட்டதால் மாணவியைத் தனது மகள் என எண்ணினான். கீசகனும் தன் உடன் பிறந்தாள் உத்தியில் வந்த உத்தரையை முறைப்பெண் என்னும் முறையைக் கொண்டு முறைக்கவில்லை. பின்னாளில் உத்தரைக்கும் அர்ச்சுனன் மகள் அபிமன்யுவுக்கும் திருமணம் நடைபெறுகின்றது. 48. உத்தரன். இவன் அறிமுகமும் நடைபெறுகின்றது. கதை ஒட்டத்திற்கு இவனும் தேவைப்படுகின்றான். 'உத்தரன் என்றொரு புத்திரன்; (I-பக்.255) வடபுலத்தில் துரியோதனன் பசுக்கூட்டத்தைக்கவர வந்தவன் நிரையிருந்த சேரியை நிர்த்துளி யாக்கி-ஊர்க்குள் நந்தரை ஒட்டினான்!