பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு தூபம் போட்டான்-தம்பி துச்சாதனன்! (1-பக். 255) பாடலில் மரபுத்தொடர்கள் பொருள் ஒளிவீசுவதைக் கானலாம். (9) ஆனாமுதல் அக்கன்னாவரை-ஆதிமுதல் அந்தம் வரை; ஆங்கிலத்தில் A to 2 என்று பேச்சு வழக்கில் அடிபடுவது. ஏகசக்கரபுரத்துக்கு வந்த விருந்தாளியான தேசாந் திரிக்கும் அனைத்தும் தெரியும் என்பதைக் கூற வந்தபோது: ஆனாமுதல் அககனனாவரை அனைத்தும்-அவனுக்கு அத்துப்படி; அவைபற்றி ஆர்கேட்டாலும் அள்ளிவிடுவான்; (1-பக். 330) என்பது வாலியாரின் வாக்காக வருவது. பாடற்பகுதியைப் படித்து மரபுத்தொடரின் பொருள் ஒளி வீசுவதைக் காணலாம் (20) திருமணம் செய்து கொள்ள தலையாட்டாதுஒப்புக் கொள்ளாது என்ற பொருளில் வருவது. ஆங்கிலத்தில் To give mod என்ற பொருளில் வருவதுடன் ஒப்பு நோக்கலாம். உதிட்டிரன் திரெளபதி ஐவர்க்கும் பொது என்று தாய் உரைத்ததை வேதவாக்கு எனக் கூறியபோது திருஷ்டத்துய்மனின் வாக்காக அதனை மறுத்துக் கூறியபோது வருவது. ‘என் தங்கை