பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邻 வருணனை வளம் * 13 காற்று; அனைத்தும் அங்கு மிதம்; ஆனந்தம் அபரிமிதம்! (I-பக் 305-306) படிப்போர் மனத்தில் காட்சி சமீபித்து நின்றுவிடுகின்றது. (3) பனிவரை இஃது இமயமலைச் சாரலுக்குப் பாண்டு தன் துணைவியர் இருவருடன் வரும் நிலையில் வருவது: நுனி வரை-பரவைநுரைபோல் வெளுத்தபனிவரை!-அங்கு நெடுகப் பார்க்கலாம்நிட்டையில் இருக்கும் -பல முனிவரை!-ஆயினும் அவர்களில் ஆரும்அறியவொண்ணார்-அந்த முதுவரை வயதினைஇதுவரை! பூமிபார்த்ததில்லை-அந்தப் பெருவரை பெருமைக்கு ஒருவரை வகுத்துரைத்த ஒருவரை! புல்பூண்டு முதலானபல்லுயிரையும்-காக்கக் கடவரை, காமாட்சி கண்வரை-தனது வசத்தில் வைத்திருக்கும்வடவரை! அந்தத் தடவரை! . அதன்பேர் இமயம்! (I-பக்-101)