பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 37 வீட்டுச்சுவர் ஒவ்வொன்றும்வண்ணச் சுண்ணங்களைஎடுத்துப் பூசிக் கொண்டுஇந்திரவில்லாய் நின்றது; காற்றே-ஒரு கைத்துடைப்பமாய் மாறிவீட்டுக் - குறடுகளில் உள்ளகுப்பை களைகூட்டிச் சென்றது! அட்டகாசமாகஅங்குலம் அங்குலமாகஅழகுபடுத்தப்பட்டதுஅரணமனை; திரும்பியதிசையெலாம்-தேர்ந்த கலைஞர்தம்கைவினை! பட்டு விரிப்புகள்; பாவை விளக்குகள்; படுதாச் சித்திரங்கள்; பஞ்சலோகச் சிலைகள் செம்பொன் தகடுவேய்ந்தசிங்காதனங்கள்; அவற்றில்கொம்பன் கொம்பாலானகைப்பிடிகள்; இன்னும் எவரது * புருவங்களையும்-நெற்றிப் பொட்டுக்கு ஏற்றும்பல்பொருள்கள்; தலைமுறை தலைமுறையாய் வரும் தொல்பொருள்கள்...