பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையும் கவிஞனும்

41


காண்கின்றனர். எல்லா நாட்டவரும் தத்தம் நாட்டுப் பண்பினை அதில் கண்டறிகின்றனர். எல்லாக் காலத்தவரும் தத்தம் காலத்துக்கு ஏற்ற கருத்துக்கள், அக்கவிதைக் கருவூலத்தில் அமைந்திருப்பதைக் காண்கின்றனர். பல கட்சியினருங்கூடத் தத்தம் கட்சிக் கொள்கைகளுக்கு ஏற்ற உரையைக் காண அக் குறள் இடம் தருகின்றது. அதனாலே, அது இன்றும் வாழ்கின்றது: என்றும் வாழும். எனவே, கவிதையின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக, வள்ளுவர் குறள் ஒன்றே இங்குப் போதும். பிற கவிதைகளைப் பற்றிப் பின்னர்க் காண்போம்.

இத்தகைய கவிதைகளைக் கவிஞன் ஏன் பாடவேண்டும்? அவனுக்கு வேறு வேலையில்லையா? இவ்வாறு பாடிப் பிழைப்பது தான் அவன் தொழிலா? அன்றிப் புகழுக்கு ஆசைப்பட்ட கவிஞன், என்றென்றும் புகழால் தான் வாழவேண்டும் என்ற எண்ணத்தால் இக் கவிதைகளைப் பாடுகின்றன? இக்கேள்விகள் சிலர் உள்ளத்து எழுதல் இயல்பு. ஆனால் அத்தகைய ஒரு குறிக்கோளுடன் கவிஞன் ஒரு கவிதையைப் பாட இயலாது. அப்படிப் பாடினாலும், பெரும்பாலும் அவன் இறப்பதற்கு முன்பே அக்கவிதை இறந்துவிடும். இன்று நாம் கண்முன்னே எத்தனையோ கவிஞர்களைக் காண்கின்றோம். அவர்கள் பாடல்கள் பத்தி பத்தியாகப் பத்திரிக்கையில் வெளி வருகின்றன. அவற்றைப் பாராட்டவும் சிலர் இருக்கின்றனர். எனினும் அவை நீரிற் குமிழியே போன்று, தோன்றிய அந்த அடிச்சுவட்டிலேயே தம் கல்லறைக்குச் சென்றுவிடுவதை நாம் அறியோமா எனவே, கவிஞன், அக்கவியால் தான் வாழ வேண்டுமென்று கருதிலுைம், புகழைத் தேடவேண்டுமென்று நினைத்தாலும், அவன் எண்ணத்தில் மண் விழத்தான் செய்யும்.

கவிஞன் கைம்மாறு கருதாதவன். அங்ங்னமாயின் ஏன் பாடவேண்டும்? பலன் ஒன்றையும் எதிர்பாராது அவன் பாடினல், அவன் வாழ்வது எவ்வாறு? அந்த நிலையைப் பற்றி எண்ணுவதுதான் உண்மைக் கவிஞனே நம்முன் கொண்டுவந்துக.வா.—3