இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதை யுள்ளம்
வேண்டாம் இக் கொடுமை—உடனே
விழித்தெழுந் தாவன வேண்டிடுவீர்
குலங் குடி ஒன்றாகக்—கொண்டு
குவலயத் தோர் நமது புகழ் கேட்க
வாழ்குவீர் வண்மையுடன்—தமிழன்
வளம்பல நாட்டினில் ஓங்கிடவும்
தமிழரின் முயற்சி யெல்லாம்—தரையில்
தக்கதொரு செயலெனத் தங்கிடவும்
பிணக்குகள் நீக்கி உடன்—என்றும்
பெறலரு மின்பத்தில் வாழ்ந்திடுவீர்
வாழ்கவே நற் றமிழர்—நாளும்
140