கவிதை யுள்ளம்
தூரலாய் மாவீழ்தாய்த் தூங்காப் பெருமழையாய்ச்
சாரலாய் வந்து தழைத்துமிகு - ஓரிரவில்
நினைத்தற் கரிய நெடுமழையைப் பெய்து
மனத்திற்கு ஓகையளி மாமழையே! - புனத்தயலும்
புள்ளிரியுஞ் சோலையிலும் பூங்கமல வாவியிலும்
உள்ளும் உயர்ந்திடுசெந் நெல்வயலும் - விள்ளரிய
இன்பம் நிறைத்து இனிமை நலங்காண
துன்பம் அகலத் துயர்நீக்கி - மன்பதைகள்
வாழ்வு பெற்றோம் யாமென்று வாழ்த்திப் பணிந்தேத்தும்
சூழ்புவியைக் காத்திடுநற் றூநீரோ! - ஏழ்கடலும்
வற்றி மழையாக வந்து உலகமெலாம்
சுற்றிப் பெருவெள்ளம் தோற்றுவிப்பாய் - முற்றறிஞர்
'கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை'யே - அடுத்துரைத்த
சொல்லேமெய்யாமென்னத் தொல்லுலகில் நீர்வளமும்
நல்ல பயிருமுடன் நாட்டுவித்து - மல்லல்
வளமுற்ற நாடதனை வந்துபெரு வெள்ளமென
அளவற் றழித்தகன்று ஆழ்த்திக் - குளமெல்லாம்
அன்னம் புகலிடமாய் ஆக்குவித்து எவ்விடத்தும்
கின்னங் களையுங் கிளர்மழையே! - உன்பெருமை
நன்றாய்ந் தறிந்து நலமுரைத்தார் வள்ளுவனார்
ஒன்றாலே யல்ல ஒருபத்தால் - பொன்றாத
'நீரின் றமையா தூலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்'கென்ற - சீரியதோர்
இன்பங் கனிந்த எழில்பெறுநற் சொல்லாலே
வன்பின் செயலகற்றி வாழ்த்துபெற்றாய்! - உன்புகழை
26